இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர் (இ - ள்.) நாகமாலைகன் மேல்நகு வண்டினம் - சுரபுன்னை மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலைகளின்மேல் விளங்குகிற வண்டுக் கூட்டங்கள், ஏக மாலையவாய் - ஒரே மாலையாகப் பொருந்தி, இசை கைவிடா - இசைபாடுதலில் நின்றும் நீங்காமைக்குக் காரணமானவளும், தோகைமா மயில்போல் - தோகையமைந்த அழகிய மயிலைப் போன்ற வளும், சுரிகூந்தலாள் - சுருண்டு தொங்குங் கூந்தலையுடையவளும் ஆகிய, மேகமாலினி என்று உரை மிக்குளாள் - மேகமாலினி என்று பெயர் கூறப் பெறுகிற புகழ்மிகுந்த நங்கை, (எ - று.) மகனின் சிறப்பு விளங்குதற்குத் தாய் தந்தையர்கள் முன்னர்க் கூறப்பட்டனர். |