(இ - ள்.) மையில் வான்உலகு ஆண்டு - குற்றமில்லாத தேவருல கத்தை அரசாட்சிசெய்து, மண்ணோர்களுக்கு உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய ஐயனால் - மண்ணுலகத்தவர்களுக்குப் பிழைக்கும் வழியை உணர்த்துமாறு தோன்றிய அந்த விச்சுவனால், இவ்வையம் ஆயது எல்லாம் - இவ்வுலகமானது முற்றும், பிற ஆரஞர் நீங்கி - மற்றைய நிறைந்த துன் பங்கள் ஒழிந்து, வளர்கின்றது - மேன்மேலுஞ் சிறந்தோங்குகின்றது, (எ- று.) அந்த விச்சுவனால் உலகத்தினர் துன்பம் நீங்கிச் சிறந்தோங்கு கின்றனர் என்க. |
(இ - ள்.)மங்குல் வான்உலகு ஆண்டு வரத்தினால் இங்கு வந்தனன் - முற்பிறப்பில் அந்த விச்சுவன் தேவருலகையாண்டு கொண்டிருந்தவன் இவ்வுலகத்தார் செய்த தவத்தினால் இங்கு தோன்றி யிருக்கிறான், ஈண்டு - இவ்வுலகத்தும்; அளிஈந்தபின் - அவன் தண்ணளி செய்த பிறகு, திங்கள் வாள்ஒளியில் திகழ் சோதியாய் - திங்களிடத்துண்டாகும் பேரொளியைப் போல விளங்குகின்ற இனிய ஒளியுடையதாய், தங்குவான் உலகில் தகை சான்றது - அவன் முன்னிருந்த வானுலகிற் போல நலம் மிக்கப் பெருகா நின்றது. |