(இ - ள்.) கோதின் மாலைகள் மேக்குதி கொண்டு எழு - குற்றமற்ற மாலைகளின் மேல் குதித்தலைக்கொண்டு எழுகின்ற, கீத மாலைய கின்னர வண்டினம் - இசைவரிசைகளில் அமைந்த கின்னரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற வண்டுகளின் கூட்டம், குழல் மாலையவாய் ஊதி உறையும் - கூந்தலிடத்திலே அணியப்பெற்ற மாலையில் ஊதித் தங்குதலையுடைய வளும், சுடர்ப்பூணினாள் - ஒளிமிக்க அணிகலன்களை யணிந்தவளுமாகிய அவள், சோதிமாலை என்பாள்-கோதிமாலை என்னும் பெயரையு டையவள் (எ-று.) |
(இ - ள்.) வெம்பு மால் களி யானை - சினத்தாலே வெம்புகின்ற பெரிய மதமயக்குடைய யானையினை, விலக்குநீர் நம்பி - வென்று களையும் நீர்மையுடைய சிறந்தோனாகிய, ஞாயிறு சேர் பெயராற்கு - அருக்ககீர்த்திக்கு, அம்பில் நீள் - அம்புபோலே நீண்ட, அரி - வரிபரந்த, வாள் - ஒளிமிக்க, நெடுங் கண்ணவள் - நெடியி கண்ணையுடைய சோதிமாலையின், வம்பு சேர் - கச்சணியப்பெற்ற, வாரி வளாகம் முலை - இன்ப வருவாயினையுடைய இடமாகிய முலை, அணி - அணிகலனாகத் திகழும் (எ - று.) அருக்க கீர்த்தி அச் சோதிமாலையை மணந்துகொண்டால் அவனுக்கு மிகப் பெருமையுண டாகும் என்றபடி, மங்கலம் என்ப மனைமாட்சி என்று கூறப்படுதலால் மனைவியை அணி என்றான் என்க. |