விலங்கு யானையாகும். கூந்து-கூந்தல்; மயிர்த்தொகுதிகள் எல்லாவற்றையும் உணர்த்தும். இச்சொல் கூந்தலென்பதன் விகாரம், கைம்மா எனவே யானையை உணர்த்திற்று. விலங்கினுள் யாளியுங் கையுடையதாயினும் குறிஞ்சிக்குரிய யானையையே ஈண்டு உணர்த்தி நின்றது. மேல் சுயம்வரச் சருக்கத்துள் “காந்தளங்கட் கமழ்குலையாற் களிவண்டுகளிறகற்றும் கலிங்க நாடன்“ என்பர். மாந்துதல்-குடித்தல்; உண்ணுதல், களிமாந்தி என இயைத்துக் கள்ளைக்குடித்து என்று உரை கூறினாரும் உளர். |