பக்கம் : 261
 

விச்சுவனை விலக்கிக் கூறுதல்

349.

சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர காந்த மாளும்
தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்
போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் 1குரிமைசெய்வ
2தாழ்கதிர் விலங்க லாளு 3மரசவஃ தரிது கண்டாய்
 

      (இ - ள்.) ஆழ்கதிர் விலங்கல் ஆளும் அரச - மிகுந்த ஒளியினையுடைய
வெள்ளிமலையினை அரசாட்சிபுரியும் மன்ன! சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர காந்தம்
ஆளும் - சுற்றிலும் ஒளிகள்சூழ்ந்த மதிலை வேலியாகக்கொண்ட சுரேந்திர காந்தத்தினை
அரசாட்சிபுரியும், தாழ் கதிர் ஆரம் மார்பில் தமனியக் குழையினான்தன் - தாழ்ந்து
ஒளிவீசும் முத்து மாலையையணிந்த மார்பினையும் பொன்னினானாகிய குண்டலத்தை
யணிந்த காதுகளையுமுடைய மேகவாகனனின், போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக்கு
- இருளைப் பிளக்கின்ற ஞாயிற்றைப் போன்ற விச்சுவனுக்கு, உரிமைசெய்வது - உரிமை
செய்தலென்னும் செயலான, அஃது அரிது கண்டாய் - அஃது அருமையான தாகுமென்பதை
உணர்ந்து கொள்வாயாக! (எ - று.)
சுயம்பிரபையை விச்சுவனுக்குக் கொடுத்தல் அருமை என்றபடி விச்சுவன் திருமணஞ்செய்து
கொள்ள இசையான் என்பது பட உரிமை செய்வது அரிது என்றான்.

( 111 )

விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்

350. மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி
அங்கயல் பிறழ்வ போலு 4மையரி யடர்ந்த வாட்கண்
பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில்5 பயின்ற போழ்தும்
தங்கிய மனத்த 6னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான்.
 

      (இ - ள்.) மங்கையர் முகத்தில் நீண்டு - பெண்களுடைய முகத்திண் கண்
நீளமாயமைந்து, கடைமதர்ப்ப மை மாந்தி - கடைக்கண்களானவை செருக்குதலையடைய
மையை மிகுதி யாகப் பூசப்பெற்று, அம்கயல்


(பாடம்) 1. உரிமைச்செய்தி. 2. யாழ்கதிர். 3. அரசவ ரரிது கண்டாய். 4. மையரி மதர்த்த வாட்கண். 5. பயின்ற போழ்து. 6. மனத்தினாகி.