பக்கம் : 263
 

மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்

352.

செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும்
அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்ந்த காலை
இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர
உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற 1முலங்கொ டோளான்.
 

      (இ - ள்.) செறிகழல் அவற்குத் தாதை - பொருந்திய வீரக்கழலை யணிந்த அந்த
விச்சுவனுடைய தந்தையாகிய, உலங்கொள் தோளான் - திரண்ட கல்லைப்போன்ற
தோள்களையுடைய மேகவாகனன், சித்திரகூடம் என்னும் அறிவரன் கோயில் எய்தி -
சித்திரகூடம் என்று கூறப்படுகின்ற அருகக் கடவுள் கோயிலையடைந்து, அணிவிழா
அயர்ந்தகாலை - அழகிய திருவிழாச் செய்தபொழுது, இறுதியில் - முடிவில், அவதி
ஞானத்தையுடைய யசோதரன் என்னும் பெயரையுடைய முனிவனைப்போற்றி, மகன்திறம
கேட்டான் - மகனுடைய வரலாற்றைக் கேட்டான் (எ - று.)

மேகவாகனன் யசோதரன் என்னும் முனிவனைப் போற்றி மகனுடைய தன்மையைப்பற்றி
உசாவினான் என்க. அவதிஞானி - முக்கால நிகழ்ச்சி களையும் உணரும் அறிவுடையோன்.

( 114 )

அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்

353. பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார்
தங்கிடய தடங்கொண் மார்பன் 2சயசேன னவற்குத் தேவி
செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை
வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே.
 

      (இ - ள்.) பங்கயப் பழன வேலிப் பவகிரி அரசன் - தாமரை மலர்ந்த வயல்களை
வேலியாகவுடைய பவகிரி என்னும் நாட்டின் அரசன், பைந்தார் தங்கிய தடங்கொள்
மார்பன் சயசேனன் - பசியமாலை தங்கிய அகன்ற மார்பையுடைய சயசேனன் என்பவன்,
அவற்குத் தேவி - அவனுடைய மனைவி, செங்கயல் நெடுங்கன் செவ்வாய்ப் பிரீதிமதி -
செவ்விய கயல


(பாடம்) 1. முழவுத்தோளான். 2. செயசேனன்.