இடம்பொருந்திய தனது அரண்மனையை மகிழ்ச்சியுடன் அடைந்தான் (எ-று.) அந்தர மகளிர் - வானவர் மகளிர். அந்தரக் கடை - உள்வாயில். |
( 124 ) |
வேறு நண்பகலாதல் |
363. | மிகுகதிர் 1விலங்கலார் வேந்தன் 2றேனுடைந் துகுகதிர் மண்டப மொளிர வேறலும் தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி நகுகதிர் மண்டில 3நடுவ ணின்றதே. |
(இ - ள்.) மிகுகதிர் விலங்கலார் வேந்தன் - மிகுந்த ஒளிதங்கிய வெள்ளிமலையையுடைய அரசன், தேன் உடைந்து உகுகதிர மண்டபம் - தன்பால் அணிந்த மலர்மாலைகளினின்றும் தேனானது வெளிப்பட்டுச் சிந்து கின்ற ஒளிதங்கிய மண்டபம், ஒளிர ஏறலும் - விளங்குமாறு அடைந்த அளவில், சுடுவன தொகுகதிர் பரப்பி - எதிர்பட்ட பொருள்களைச் சுடுவன வாய்க்கூடிய ஒளிகளைப் பரப்பி, சூழ்ஒளி நகுகதிர் - சுற்றிலும் ஒளியானது விளங்குகின்ற கதிரவனாகிய ஞாயிறு, நடுவண் நின்றது - வானத்தின் நடுவிடத்தைப் பொருந்தியது. (எ - று.) அரசன் தனது இருப்பிடத்தை அடைந்தபோது நண்பகலாயிற்றென்க. |
( 125 ) |
364. | கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத் தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே. |
(இ - ள்.) கண் - கணுக்களோடே, திரள் கழைவளர் - திரண்டு கோலாக வளரா நின்ற, கரும்பு - கரும்புகள், கை மிகுத்து - பக்கங்களிலே மிக்கிருத்தலானே, ஒண்திரள் வெள் இலை உரிஞ்சும் - அவற்றின் ஒள்ளிய திரளாகிய வெள்ளிய ஓலைகளிலே தம் உடற்றினவு தீர உராய்கின்ற, ஓடைமா |
|
(பாடம்) 1. விலங்கலான். 2. தேனுடைத் துகிர்கதிர். 3. நடுவு நின்றதே. |