- முகபடாமணிந்த யானைகளை, வெண் திரள் மணி - வெள்ளிதாய்த் திரண்ட அவற்றின் மணிகள், புடை சிலம்ப - பக்கங்களிலே ஒலிக்கும்படி, விட்டன - அக்கருப்பங் காடுகளினூடே விடப்பட்டன; வளைகள் வண்திரள் கிளையொடு ஆர்த்த - அவ்வுச்சிப் போதினை உணர்த்தற் பொருட்டு ஊதா நின்ற சங்குகள் வளவிய திரண்ட தம்மினத்தோடே ஆரவாரித்தன (எ - று.) உச்சிப்போதாகலின் யானைகள் கருப்பஞ் சோலையில் விடப்பட்டன. அக்காலத்தில் முழங்கும் சங்கினங்கள் முழங்கின என்க. இலை - ஈண்டு புல்லிற்கு வந்தது. |
(இ - ள்.) கடவுட் டானம் - கடவுள் உறையும் கோயில்களிடத்தே, ஒலி விழா வண்டினம் - ஓசை குறையாத வண்டுக் கூட்டம், ஊதா - இசையா நிற்ப, ஊறு தேன் மலி - ஊறுகின்ற தேன் மிக்க, விழாப் பிணையலும் - திருவிழாவிற்குரிய மலர் மாலைகளும், மணங்கொள் சாந்தமும் - நறுமணமுடைய சந்தனமும், பலி - பூசைபெறுகின்ற, விழா பதாகையும் - இறக்காத கொடிகளும், பரந்து - பரவி, பாடுவார் - இறைவனை ஏத்திப் பாடுகின்ற அடியார்களின், கலி - ஆரவாரத்தையுடைய, விழா - திருவிழாக்கள், கழுமின - மிக்கன (எ - று.) கடவுட் டானத்தே வண்டுபாடும் மலர்மாலைகளும் நறுமணச் சந்தனமும் கொடியும் பரவி அடியார் ஏத்தொலிமிக்க விழாக்கள் மிக்கன என்க. ஒலி விழா - விழா வொலி என மாறுக. விழாப் பதாகை - இறக்காத கொடி என்க. விழாவிற்குரிய பதாகையுமாம். |