பக்கம் : 274
 

கண் சேந்தமை காதலருடன் கலவி செய்தார் கொல் என்னும் ஐயமுண்டாக்கு மாதலின்
அதனைத் தாயர்க்கு மறைத்தல் வேண்டிற்று.

( 131 )

ஈரணிப்பள்ளி வண்ணனை

370. சந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந்
தந்தரத் தசைப்பன வால வட்டமு
மெந்திரத் 1திவலையு மியற்றி 2யீர்மணல்
பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார்.
 

     (இ - ள்.) சந்தனம் துளி - சந்தனக்குழம்பின் துளிகள், தலை ததும்ப -
இடந்தோறும் ததும்பும்படி பெய்து, சாந்தளைந்து - குங்குமச் சாந்தையும் பூசி, அந்தரத்து -
வானிடத்தே, அசைப்பன - அசைத்தற்குரிய, ஆலவட்டமும் - விசிறிகளையும், எந்திரத்
திவலையும் - நீர்வீசும் இயந்திரத் துருத்திகளையும், இயற்றி - அமைத்து, ஈர்மணல் -
ஈரமுள்ள மணல்பரப்பிய, பந்தருள் - பந்தலினுள்ளே, குவலைப்பாலிகை -
குவளைத்தாழிகளையும், பாய்த்தினார் - பரப்பி வைத்தனர் (எ - று.)
சந்தனத் துளிகளைச் சிதறிக்; குங்குமச் சாந்தைப் பூசி. நீர் தெளித்து; மணல் பரப்பப்பட்ட
பந்தருக்குள் குவளைப்பாலிகையும் பரப்பினார் என்க. பாலிகைக் குவளை - குவளைக்கொடி
நட்டு வளர்க்கப்படும் ஒரு பாண்டம். இவற்றைக் குளிர்ச்சியின் பொருட்டு மாடங்களிற்
பரப்புதல் வழக்கம், இதனைப் “பாலிகைத் தாழியொடு பல்குடம் இரீஇ முந்நீர்ப்பந்தர்முன்
கடைநாட்டி“ எனவரும் பெருங்கதையினும் (1 - 40 : 125 - 6) காண்க.

( 132 )

371. குருமணித் தாமரைக் கொட்டை சூடிய
திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும்
பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி
அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார்.
 

     (இ - ள்.) குருமணி தாமரைக் கொட்டை சூடிய - நிறமமைந்த அழகிய தாமரைப்
பொகுட்டுப்போன்ற உறுப்பினைச் சூட்டப்பட்ட, திருமணிப் பீடமும் - அழகிய
பீடத்தின்கண்ணும், செதுக்கம் ஆயவும் - இங்ஙனமே பிறபிற


(பாடம்) 1. துவலையும். 2. ஈர்மணர்ப்.