அரசன் யாண்டுச் செல்லினும் காவல் இன்றியமையாததாகலின், நிமித்திகன் மனைக்குச் செல்லும்போதும் பாதுகாத்துச் செல்லுகின்றனர் என்க. |
( 138 ) |
அரசன் நிமித்திகன் வாயிலையடைதல் |
377. | சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும் கரும்புசூழ் 1கிளவியர் சொரிந்து கைதொழ நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான். |
(இ - ள்.) அரும்புசூழ் தெரியலான் - அரும்புகளைச் சூழவமைத்துக் கட்டப்பெற்ற மாலையையணிந்த அரசன், கரும்புசூழ் கிளவியர் - கரும்பினது இனிமையானது அமையப்பெற்ற சொற்களையுடைய மங்கையர், சுரும்புசூழ் பிணையலும் - வண்டுகள் மொய்க்கப்பெற்ற மாலையையும், சுண்ணமாரியும் - நறுமணப் பொடிகளின் மழையையும், சொரிந்து கைதொழ - மிகுதியாகப் பெய்து கையெடுத்து வணங்க, நிரம்பு நூல் நிமித்திகன் - சோதிட நூற்புலமை நிறைந்த சதுவிந்துவினுடைய, மாட நீள்கடை - வீட்டின் நீண்ட வாசலை, அருளின் எய்தினான் - அன்போடு அடைந்தான் (எ - று.) |
( 139 ) |
நிமித்திகன் அரசனை வரவேற்றல் |
378. | எங்குலம் விளங்கவிங் கருளி வந்தவெங் கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக் கங்கலர் கேள்வியா னாசி கூறினான். |
(இ - ள்.) மங்கல உழைக்கலம் பரப்ப - நிமித்திகனது இல்லத்து வாயிலையடைந்த அரசன் தன்னுடன் கொண்டு சென்ற மங்கலப் பொருள்களைப் பரப்பிவைக்க, அங்கு - அப்போது, அலர்கேள்வியான் - விரிந்த கேள்வியறிவையுடைய சதவிந்து, எங்குலம் விளங்க - எம்முடைய குலமானது மேன்மையையடைய, இங்கு - இவ்விடத்திற்கு, அருளிவந்த - |
|
(பாடம்) 1. கிளவியார். |