பக்கம் : 281
 

கனைத்து - மிகுத்து, ஒருதோள்வளையின் கதிர் மற்றொன்றன் கதிரோடு எதிரும்
மணிக்கடகம் என்றவாறு நூல் - நிமித்தநூல்.
 

( 143 )

அரசன் அடைந்த காரியத்தைச் சதவிந்து கூறுதல்

382.

மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்
1வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்
கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்
அணங்கெழில் 2விரிந்தநூ லலர்ந்த நாவினான்.
 

    (இ - ள்.) அணங்கு எழில் விரிந்த நூல் அலர்ந்த நாவினான் - தெய்வத்தன்மையும்
அழகும் மிகுந்த நிமித்த நூற்புலமையிற் பயின்று மலர்ந்த செந்நாவினையுடைய சதவிந்து
வேந்தனை நோக்கி வேந்தே!, கருதிற்று - நீ இப்பொழுது நினைத்த காரியம், மணம்கமழ்
மதுமலர் அலங்கன் மாலைபோல் - நறுமணம் பொருந்திய தேன் அமைந்த மலர்களால
கட்டப் பெற்றதாகிய அசைகின்ற மாலையைப்போல், வணங்கு எழில் - கண்டாரை
வணங்கச் செய்யும் அழகினையும், நுடங்குஇடை - தளருகின்ற மருங்குலையும் உடைய, நம்
மாழைநோக்கி கணம் குழை - நம்முடைய மாவடுப்போலும் கண்ணமைந்தவளும் வட்டமான
குழை என்னும் காதணிகளை யணிந்தவளுமாகிய சுயம்பிரபையின், கருமம் ஆம் என்றனன்
- மணவினைச் செயல் ஆகும் என்று கூறினன் (எ - று.)

சதவிந்து நிமித்திகனுடைய நிமித்திக ஆற்றல் இதனாலும் பெறப்படுதல் காண்க.
 

( 144 )

தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்

383. வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்
கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை
மண்ணிலா மறுகிடை வலங்கொண் 3டெய்தினாள்
எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வண்ணமே.

    


    (பாடம்) 1. வணங்கெழுவடங்கிடை. 2. விரிந்தநூல். 3. ஏகினாள்.