பக்கம் : 282
 

     (இ - ள்.) வெள்நிலா விரிந்தென விளங்கு மாலையள் - வெள்ளிய திங்களொளி
பாவிற்றென்று சொல்லும்படியாக விளங்குகின்ற முத்துமாலையை அணிந்தவளாகவும்,
கண்நிலாம் கவர்தகைக் கண்ணி - காண்போர் கண்ணில் நின்று நிலவுவதும் உள்ளத்தைக்
கவர்வதுமாகிய அழகுபொருந்திய கண்ணை யுடையாளாகவும் ஒருத்தி, மண் நிலாம் மறுகு
இடை - மண் விளங்குகின்ற தெருவினிடத்திலே, மன்னனை வலங்கொண்டு எய்தினாள் -
அரசர் பெருமானாகிய நின்னை வலஞ் செய்து கொண்டு சென்றாள், எண்ணில் - அதனை
ஆராய்ந்து பார்க்குமிடத்து, ஆங்கு அது திரு எதிர்ந்த வண்ணம் - அவ்விடத்திலே
அவ்வாறு வலஞ்செய்தது நின்மகட்கு மங்கலம் வந்துற்றதை உணர்த்தும் (எ - று.)

கள்நிலாம் கவர் தகைக் கண்ணி, என்பதற்குத்தேன் விளங்குகின்றதும் உள்ளத்தைக்
கவரத்தக்க அழகு பொருந்தியதுமாகிய மாலையை அணிந்தவள் என்று உரைப்பினும் பொருந்தும்.நீ இங்கு வந்துற்றபோது நின்னை ஒரு வெண்மாலை யணிந்த அழகி
வலஞ்சுற்றிச் சென்றனள். அந்நிமித்தத்தின் பயன் யாதெனில் நின் மகட்குத் திருமணம்
நிகழுதற்குரிய காலம் வந்துற்றது என்பதாம்; என்றான் என்க. மன்னனை - முன்னிலைப்
புறமொழி.

( 145 )

384. 1பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை
2மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்
என்சொலா லின்றியா னியம்பு நீரதோ
3மன்சுலா வகலநின் றலரும் வாளினாய்.
 

      (இ - ள்.) பொன் சுடர் சுலாம் இழைபொறுத்த - பொன்னினது
ஒளிபரவுகின்றனவும் மணிகள் வைத்திழைக்கப் பெற்றனவுமாகிய, பூண் - அணிகலன்களை
அணிந்த, முலை - முலையினை உடையவளும், மின்சுலாம் - மின்னல்போன்று துவளும்,
நுடங்கு இடை - ஒசியாநின்ற இடையினையும் உடைய, மெல்லியாள் திறம் - மென்மைமிக்க
அச்சுயம்பிரபையின் பெருமை, என்சொலால் - ஆற்றலிலாத என்னுடைய எளிய
சொற்களாலே, இன்று - இப்பொழுது, யான் இயம்பும் - யான் கூறுதற்கு, நீரதோ -


(பாடம்) 1. பொன்குலாம். 2. மின்குலாந்நுடங்கிடை. 3. மன்குலா.