எளிமையுடையதேயோ, மன்சுலா அகல - பகை மன்னர்கள் மனம் சுழன்று ஓடுமாறு, நின்று - மறத்தோடேபொருந்தி, அலரும் - விளங்கும், வாளினாய் - வாட்படையை உடைய வேந்தனே (எ - று.) வாளினாய் இயம்பும் நீரதோ எனக்கூட்டுக. |
(இ - ள்.) போதுவார் புரிகுழல் பொலம்கொம்பு அன்ன - மலரினை யணியப்பெற்றதும் நீண்டுள்ளதும் பின்னல் அமைந்துள்ளதுமாகிய பொற்பூங் கொம்பைப்போன்ற, இம்மாதராள் வனமுலைக்கு உரியமைந்தன் - சுயம்பிரபையின் அழகிய கொங்கைகளைத் தழுவுதற்குரிய மணாளனை, ஆதிநாள் - முன்னாளிலே, அறக்கதிர் ஆழி தாங்கிய - அறத்தின் பெருமையை வெளிப்படுத்தும் உருளையைத் தாங்கிய, சோதியான் திருமொழி - ஒளியையுடையவனாகிய அருகபரமேட்டிகள் திருவாய் மலர்ந்தருளிய மாபுராணம், விளக்கித் தோற்றும் - விளக்கமாகத் தெரியப்படுத்தும் (எ - று.) சுயம்பிரபைக்குரிய மணாளனை மாபுராணம் கூறுகின்றது என்று நிமித்திகன் தெரியப்படுத்துகிறான். |