(இ - ள்.) கொலைதருவேலினாய் - கொலையைச் செய்கின்ற வேற்படையை யுடையவனே, இவ் அலைதிரை நெடுங்கடல் அவனிவட்டம் - அலைகின்ற திரைகள் பொருந்திய நீண்ட கடலாலே சூழப்பெற்ற இந்த உலகமானது, இரண்டதாய் - இரண்டு கூறுடையதாய், குலகிரி ஆறு கூர்கண்டம் ஏழ் குலாய் - மேன்மையமைந்த ஏழு மலைகளையும் ஏழு ஆறுகளையும், பொருந்திய ஏழு கண்டங்களையும் உடையதாய் மேலும், மலைதிரை வளர்புனல் ஏழ் - கரையை மோதுகின்ற அலைகள் பொருந்திய ஏழு கடல்களையும் உடையதாய், கூறப்பட்டது-சொல்லப்பட்டிருக்கிறது (எ-று.) இவ்வவனி வட்டம் இரண்டு கூறுடையதாய் ஏழுகிரிகளையும் ஏழு பேரியாறுகளையும் ஏழு கண்டங்களையும் ஏழு கடல்களையும் உடையதாய்க் கூறப்பட்டது என்க. |
(இ - ள்.) மாற்று அறு - ஒப்பற்ற, மண்டிலம் அதனுள் - இம்மண்ணுலகத்தே, ஊழியால் - முறைமையாலே, ஏற்றிழிபு - உயர்வுதாழ்வுகள், உடையன - தம்முள் உடையன, இரண்டு கண்டமாம் - இரண்டு கண்டங்கள் உளவாம், தேற்றிய - அவ்வாறு உளவாகக் கூறப்பட்ட, இரண்டினும் - அவ்விரண்டனுள், தென்முகத்தது - தென்றிசைக்கண் உள்ள கண்டம், பாற்று அரும் புகழினாய் - தவிர்த்த லரிய புகழையுடையோனே, பரதகண்டமே - பரதகண்டம் எனப்படும் (எ - று.) |