(இ - ள்.) அது - அப்பரத கண்டமானது, மணிமயம் ஆகி - மிகுந்த செல்வம் அமைந்ததாகி, கற்பகம் - கற்பகமரத்தையும், பொற்றிரள் - சங்கநிதி பதுமநிதி முதலிய ஒன்பது வகைச் செல்வத்தையும், அணிபொழில் - அழகிய பொழில்களையும் உடையதாய், போக பூமியாய் - இன்ப நிலமாய் அமைந்திருந்து, முற்றிய ஊழி மூன்று ஏறி மீள்வழி - நிரம்பப்பெற்ற ஊழிக் காலங்கள் மூன்று முடிந்து நிரம்பியவிடத்து, பிற்றகையூழி - பிற்பாடு உண்டான ஊழிக்காலத்திலே, இவண் பிரமர் தோன்றினார் - இங்கு நான்முகர் தோன்றினார் (எ - று.) நான்காவது ஊழிக்காலத்தே இங்கு நான்முகர் தோன்றினார் என்க. |
(இ - ள்.) பொங்கிய புரவியாய் - மிகுதியான குதிரை களையுடையவனே! வெங்கதிர்ப் பரிதியும் - வெவ்விய ஒளியினையுடைய ஞாயிறும், தண்பனி விரவு அங்கதிர் வளையமும் - மிகுந்த குளிர்ச்சியானது பொருந்தப்பெற்ற திங்கள் வட்டமும், ஆதியாயின - முதலாயினவற்றை, இங்கு இவர் படைத்தனர் - இவ்வுலகத்தில் நான்முகனானவர் உண்டாக்கினார், போக காலம் இவ்வகை இழிந்தது - போக பூமியாக அமைந்திருந்த காலமானது இவ்வாறு சென்றது (எ - று.) |