‘குறிஞ்சிக்கு உணவு ஐவனநெல்லும் தினையும் ‘மூங்கில் அரிசியும்‘ என்பது தொல்காப்பியப் பொருளதிகாரவுரை. ஐவனநெல் என்பது மலைச்சாரலில் விளையும் நெல். இன்கதிர் என்று எடுத்து இனியகதிர்கள் என்று பொருள் கூறினுமாம். |
( 23 ) |
முல்லை |
30. | பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர் தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே. |
(இ - ள்.) பேழ்த்தகாயின பேர்எள்-முற்றிப் பிளவுபட்டனவான காய்களையுடைய பெரிய எள்ளுச்செடிகளும்; பிறங்கு இணர்த் தாழ்த்த காயின தண் அவரைக்கொடி-விளங்குகின்ற கொத்துக்களாகத் தாழ்த்த காய்களையுடைய குளிர்ந்த அவரைக்கொடியும்; சூழ்த்த காய்த்துவரை-தம்மைச் சூழும்படி காய்களைக் காய்த்த துவரைச்செடிகளும்; வரகு-வரகும்; என்ற இவை-என்று சொல்லப்பட்ட இவைகள்; முல்லைநிலங்கள்-முல்லை நிலங்களிலே; மூழ்த்த போன்றுஉள-செறிந்து மூடியிருப்பதுபோல் உள்ளன, (எ - று.) இது முல்லைநிலத்தின் சிறப்பு. முல்லைக்குஉணா, வரகும் சாமையும் முதிரையும் என்ப. பேரெள், எள்ளில் ஒருவகை. அவரைக் கொடிக்குத் தன்மை அடர்ந்து நிழல்தருதலும் பசுமையும் கண்ணுக்கினிமையுமாம். |
( 24 ) |
மருதம் |
31. | மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும் பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த் தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின் காடு கொண்டுள கண்ணக னாடெலாம். |
(இ - ள்.) மோடு கொண்டஎழு-பருமையைக் கொண்டு ஓங்கும்; மூரிகழை கரும்பு-பெரிய கருப்பங்கழிகளை; ஊடுகொண்ட-தம்மிடத்திலே கொண்ட; பொதும்பரொடு-சோலைகளுடனே; உள்விராய்-அதனுள்ளே கலந்து; தோடுகொண்ட -தொகுதியுற்ற; பைங்காய்-பசியகதிரை ஈன்று; துவள் செந் |