எனவே, இருபத்துநான்கு தீர்த்தங்கரரும், பன்னிரு சக்கரவர்த்திகளும், ஒன்பது பலதேவரும், ஒன்பது வாசுதேவரும். ஒன்பது பிரதிவாசுதேவரும் என்றவாறாயிற்று. பலவர் - பலதேவர், கேசவர் - வாசுதேவர், வாசுதேவர் ஒன்பதின்மர்க்கும் பிரதி வாசுதேவர் ஒன்பதின்மரும் பகைவர் ஆதலின். மாற்றவர் என்றார். |
( 192 ) |
அருகக் கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல் |
401. | மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப் பொன்னவிர் போதன முடைய பூங்கழல் 1கொன்னவில் வேலவன் குலத்துட் டோன்றினால் அன்னவன் கேசவர்க் காதி யாகுமே. |
(இ - ள்.) மன்னவ - பரதனே! நின்மகன் மரிசி - நின் மகனாகிய மருசி என்பவன், மாற்று இடைப்பொன் அவிர் - மாற்றுயர்ந்த சிறந்த பொன்னாலாகிய மாளிகை விளங்குகின்ற, போதனம் உடைய - போதனமா நகரத்தினை உரிமையாக வுடையவனும், பூங்கழல் கொல்நவில் வேலவன் குலத்துள் தோன்றினால் - அழகிய வீரக்கழலை யணிந்தவனும் கொலைத் தொழிலைத் தோற்றத்தாலே கூறிவிளங்குகின்ற வேற்படையை யுடையவனுமாகிய அரசனுடைய குலத்திலே பிறந்தால், அன்னவன் - அவன், கேசவர்க்கு ஆதியாகும் - முதலாவது வாசுதேவன் ஆவான் (எ - று.) மன்னவ - அண்மைவிளி. மரிசி. மருசி. போதனம் - போதன நகரம். போதனமுடைய வேலவன் என்றது பயாபதி வேந்தனை. கேசவர் - வாசுதேவர். |
( 193 ) |
அவன் அச்சுவகண்டனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல் |
402. | கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை காசறு வனப்பினோர் 2கன்னி யேதுவால் ஆசற வச்சுவக் கிரீவ னாவியும் 3தேசறு திகிரியுஞ் 4செவ்வன் வௌவுமே. |
(பாடம்) 1. சொன்னவில். 2. கண்ணி. 3. தேசுறு. 4. செல்வனவ்வுமே. |