(இ - ள்.) கேசவனார் திறம் கிளப்பின் - அந்த முதல் வாசுதேவனுடைய தன்மையைச் சொல்லுமிடத்து, அவன் வெண்மலை - வெள்ளி மலையிலே தோன்றும், காசு அறுவனப்பின் ஓர் கன்னி ஏதுவால் - குற்றமற்ற அழகினையுடைய ஓர் மணமாகாத மங்கையின் பொருட்டு, ஆசு அற - பற்றுக்கோடு நீங்குமாற, அச்சுவக்கிரீவன் ஆவியும் - அச்சுவகண்டன் என்னும் பெயரையுடையவன் உயிரையும், தேசறு திகிரியும் - ஆண்மையற்ற அவனுடைய ஆணையுருளையையும், செவ்வன் வௌவும் - நன்றாகக் கைப ்பற்றுவான் (எ - று.) |
(இ - ள்.) சீர் அணி திருமொழித் தெய்வத் தேவன் - சிறப்புப் பொருந்திய திருவாய் மொழிகளையுடைய தேவ தேவனாகிய அருகக் கடவுள், பார்அணி பெரும்புகழ்ப் பரத - உலகத்திலே அழகாக விளங்கும் பெரிய புகழையுடைய பரதனே! தேர் அணி கடற்படைத் திவிட்டன் சென்று - தேர் முதலியவைகளைக்கொண்ட அழகிய கடலைப்போன்ற படையையுடைய அத் திவிட்டனானவன் போய், பின் ஆர் அணி அறக்கதிர் ஆழி நாதனாம் என்றனன்-பிற்பாடு ஆர்க்கால்களையுடைய ஒளி தங்கிய அறவாழியை ஏந்தி உலகத்தைப் புரக்குந் தலைவனாவான் என்று கூறினன் (எ - று.) ஆர் அணி - ஆத்திமாலையை அணிந்து என்று உரை கூறுவாரும் உளர். திவிட்டன் என்றது அம்முதல் வாசுதேவனான திவிட்டன் என்பது பட நின்றது. எனவே பயாபதி வேந்தன் மகனான திவிட்டனே முதல் வாசுதேவன் என்று உணர்த்தினானுமாம். பரத - விளி. தெய்வத்தேவன் - தேவதேவன்; அருகன். |