(இ - ள்.) திருஅமர் - திருமகள் விரும்பி யுறையும், சுரமைநாடு அணிந்து - சுரமைநாட்டை அழகுசெய்து, செம்பொனால் பொருவு அருபோதனம் உடைய - செம்பொன் மாளிகைகளாலே தனக்கு வேறொரு நகரும் இணையில்லாததாக விளங்கும் போதனமா நகரத்தினை உரிமையாக வுடையவனும், பூங்கழல் - அழகிய வீரக்கழலை யணிந்தவனும், செருஅமர் தோளினான் - போரைவிரும்புந் தோள்களையுடையவனுமாகிய பயாபதி மன்னனின், சிறுவராகிய இருவருள் - மக்களாகத் தோன்றிய இரண்டு பெயர்களுக்குள்ளே, இளையவன் ஈண்டு அந்நம்பியே - இளையவனாகிய திவிட்டன் என்பவன் இங்கு சொல்லப்பெறுகிற அக்குரிசிலேயாவன் (எ - று.) இருவர் - விசயனும் திவிட்டனும். |
(இ - ள்.) கான்உடை விரி திரை வையம் காக்கிய - காடு களையுடையதும் கடலாலே சூழப்பெற்றதுமாகிய உலகத்தைப் புரத்தற் பொருட்டு, மானுட உடம்பினால் மறைந்துவந்த - மக்கள் யாக்கையைக்கொண்டு தேவ வடிவந்தோன்றாமல்வந்த, அத் தேனுடை அலங்கலான் தெய்வமார்பகம் - தேன் பொருந்திய மாலையினையுடைய அந்தத்திவிட்டனின் தெய்வத்தன்மை பொருந்திய மார்பிடத்தை, தையல் தான் அடைந்து அமர்வதற்கு உரியள் - சுயம்பிரபையானவள் சேர்ந்து பொருந்துவதற்கு உரிமையை உடையவள் ஆவள் (எ - று.) |