வேண்டிய அறிகுறி, இங்குயான் இசைத்ததே அமையும் - இப்போது நான்கூறியதே போதும், அல்லது - இதனையல்லாமல், ஓர் திங்கள் நாள் அகவையில் - ஒரு திங்கள் கால அளவில், திவிட்டன் - மேற்கூரிய திவிட்டனானவன், ஒருசிங்கம் வாய் பிளந்திடும் - ஓர் அரிமாவின் வாயைப்பிளந்து கொல்வான், இது தெளி என்ன - இதனை உணர்ந்துகொள்வாயாக! என்றுகூற, ஆங்கு, அசைநிலை (எ - று.) திவிட்டனுடைய தன்மையை உணர்ந்துகொள்வதற்கு நிமித்திகன் ஓர் அறிகுறியை குறிப்பிட்டான். |
(இ - ள்.) நிமித்திகன் - நிமித்திகன், உரைத்தலும் - அவ்வாறு கூறியவுடன், நிறைந்த சோதியான் - மிகுந்த ஒளியுடையவனாய், உமைத்தகை - உவமைகூறும் தகுதி, இலாததோர் உவகை - இல்லாதவாறு மிகவுயர்ந்ததொரு மகிழ்ச்சியின் கண், ஆழ்ந்து - அழுந்தி, கண் இமைத்திலன் - கண்ணை இமையாதவனாய், எத்துணைப் பொழுதும் - நெடிது நேரம், சுமைத்தகை ஈர்மலர் - சுமையாக மிக்க ஈரியமலர் அணிந்த, நெடுமுடி - நீண்டமுடிக்கலன், சுடர - ஒளிரும்படி, தூக்கினான் - தன் தலையினை உயர்த்தி அமைவானாயினன் (எ - று.) உவமை - இடைகுறைந்து உமை என நின்றது. சடியரசன் உவகைப் பெருக்காலும், வியப்பாலும் சிறிது போது திகைத்திருந்தனன் என்பது இதனால் உரைக்கப்பட்டது. |