பக்கம் : 299
 

மக்கட்பேற்றின் மாண்பு கூறல்

413. தொக்கிள மலர்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் 1பிறைவிசும் பிலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே.
 

     (இ - ள்.) இளமலர் தொக்கு துதைவு இலாத சோலையும் - வாடாத மலர்கள்
நிறைந்து நெருங்கப் பெறாத சோலையும், இளந்தாமரை புக்குநகாத பொய்கையும் - அழகிய
தாமரைகள் பொருந்தி விளங்கப்பெறாத தடாகங்களும், விசும்புமிக்கு இளம்பிறை இலாத
அந்தியும் - விண்ணின் கண்ணே மிகுந்த இளம் பிறையைப் பெற்றிராத மாலைப்போதும்,
மக்களை இலாதது ஓர் மனையும் - மக்கட் பேற்றினைப் பெற்றிராத ஓர் இல்லமும், ஒக்கும் - ஒரே தன்மை யமைந்தனவாக எண்ணப்பெறும் (எ -று.)

மலரற்ற பொழிலும், தாமரையில்லாத பொய்கையும், பிறையில்லாத மாலைக்காலமும்,
மக்களில்லாத மனையும் ஒரே தன்மை அமைந்தனவென்க.

( 175 )

குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்

414. தலைமகன் றாடனக் காகச் 2சாகைய
நிலைமைகொண் 3மனைவியா நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா 4முதியர் தேன்களாக்
குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே.
 

     (இ - ள்.) குலமிகு கற்பகம் - அரசகுலம் என்று மேன்மையாகச் சொல்லப்பெறுகிற
கற்பக மரமானது, தாள் தனக்கு ஆக தலைமகன் - எல்லாவற்றையுந் தாங்கும் அடி
மரமாகத் தலைவனையும் சாகை - அம்மரத்தின் கிளைகள், நிலைமைகொள் மனைவியா -
நல்ல தன்மையைக் கொண்டுள்ள மனைவியராகவும், சாகைய நிமிர்ந்த பூந்துணர் -
அக்கிளை களினின்றும் வெளிப்பட்டுத் தோன்றும் பூங்கொத்துக்கள், நலம்மிகு மக்களா -
அறிவமைந்த மக்களாகவும், முதியர் தேன்களா - முதியோர்கள் தேன்


   (பாடம்) 1. பிறைவிரிவிலாத. 2. சாகையன். 3. மனைவியர். 4. மதியர்.