பக்கம் : 30
 

நெலின் காடுகொண்டு-தலைசாயப்பெற்ற செந்நெற் பயிர்களின் மிகுதியைக் கொண்டு; கண்
அகல் நாடு எலாம்உள-இடமகன்ற மருதநிலப் பகுதி முழுவதும் உள்ளன. (எ - று.)

இது மருதநிலத்தின் மாண்பு மருதத்திற்கு உணவு செந்நெல்லும் வெண்ணெல்லும். செந்நெல்
மிகுந்த நீர்வளத்திலே விளையும் நெற்பயிரின் ஒரு சிறந்த சாதி.

( 25 )

நெய்தல்

32. சங்கு நித்தில முந்தவ ழிப்பியும்
தெங்கந் தீங்குலை யூறிய நேறலும்
வங்க வாரியும் வாரலை வாரியும்
தங்கு வாரிய தண்கட னாடெலாம்.
 
     (இ - ள்.) சங்கு நித்திலமும்-வலம்புரிச் சங்கு ஈன்ற முத்துக்களும்; தவழ்
இப்பியும்-தவழ்ந்துசெல்லும் இப்பியிற் பிறந்த முத்துக்களும்; தெங்கு அம்தீம்குலை ஊறிய
தேறலும்-தென்னையின் அழகிய இனிய பாளையில் ஊறிய கள்ளும்;
வங்கவாரியும்-மரக்கலங்களின் மூலமாகப் பிறநாடுகளிலிருந்து வரும் பண்டங்களும்;
வார்அலை வாரியும்-நீண்ட கடலிடத்தே உண்டாகும் பொருள்களும் ஆகிய; தண்கடல்
நாடுஎலாம்-குளிர்ந்த நெய்தல்நிலம் முற்றும்; தங்குவாரிய-நிலைபெற்ற வருவாய்களை
யுடையனவாகும் (எ - று.)

தேறல்-தெளிந்த இளநீர் எனினுமாம். சங்கு முதலியன நெய்தல்நிலத்து வளங்கள்.
மூன்றாவதடி முற்றுமோனையாக அமைந்திருக்கிறது.

வலம்புரி முத்துக்களும், இப்பிமுத்துக்களும், தென்னங்கள்ளும், மரக் கலங்களின் மூலமாகப்
பிற நாடுகளில் இருந்துவரும் பொருள்களும் கடலில் உண்டாகும் பொருள்களும்
நெய்தல்நிலத்தில் மிகுந்துள்ளன என்க.

( 26 )

திணைமயக்கம் (மலர்)

33. கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்
இடைச்சியர் கதுப்பயற் கமழு மேழையம்
கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்
தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோன்றுமே.