நெலின் காடுகொண்டு-தலைசாயப்பெற்ற செந்நெற் பயிர்களின் மிகுதியைக் கொண்டு; கண் அகல் நாடு எலாம்உள-இடமகன்ற மருதநிலப் பகுதி முழுவதும் உள்ளன. (எ - று.) இது மருதநிலத்தின் மாண்பு மருதத்திற்கு உணவு செந்நெல்லும் வெண்ணெல்லும். செந்நெல் மிகுந்த நீர்வளத்திலே விளையும் நெற்பயிரின் ஒரு சிறந்த சாதி. |
( 25 ) |
நெய்தல் |
32. | சங்கு நித்தில முந்தவ ழிப்பியும் தெங்கந் தீங்குலை யூறிய நேறலும் வங்க வாரியும் வாரலை வாரியும் தங்கு வாரிய தண்கட னாடெலாம். |
(இ - ள்.) சங்கு நித்திலமும்-வலம்புரிச் சங்கு ஈன்ற முத்துக்களும்; தவழ் இப்பியும்-தவழ்ந்துசெல்லும் இப்பியிற் பிறந்த முத்துக்களும்; தெங்கு அம்தீம்குலை ஊறிய தேறலும்-தென்னையின் அழகிய இனிய பாளையில் ஊறிய கள்ளும்; வங்கவாரியும்-மரக்கலங்களின் மூலமாகப் பிறநாடுகளிலிருந்து வரும் பண்டங்களும்; வார்அலை வாரியும்-நீண்ட கடலிடத்தே உண்டாகும் பொருள்களும் ஆகிய; தண்கடல் நாடுஎலாம்-குளிர்ந்த நெய்தல்நிலம் முற்றும்; தங்குவாரிய-நிலைபெற்ற வருவாய்களை யுடையனவாகும் (எ - று.) தேறல்-தெளிந்த இளநீர் எனினுமாம். சங்கு முதலியன நெய்தல்நிலத்து வளங்கள். மூன்றாவதடி முற்றுமோனையாக அமைந்திருக்கிறது. வலம்புரி முத்துக்களும், இப்பிமுத்துக்களும், தென்னங்கள்ளும், மரக் கலங்களின் மூலமாகப் பிற நாடுகளில் இருந்துவரும் பொருள்களும் கடலில் உண்டாகும் பொருள்களும் நெய்தல்நிலத்தில் மிகுந்துள்ளன என்க. |
( 26 ) |
திணைமயக்கம் (மலர்) |
33. | கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர் இடைச்சியர் கதுப்பயற் கமழு மேழையம் கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த் தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோன்றுமே. |