பக்கம் : 300
 

களாகவும், குளிர்ந்து தோன்றும் - களிப்புடன் காணப்பெறும். (எ - று.) சாகைய
என்பதனைப் பிரித்துச் சாகை மனைவி என்னும், பின்னர்ச் சாகைய பூந்துணர் என்றும்
கூட்டுக.

( 176 )

நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்

415. சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு
மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்
வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்
காழிநீர் வையகத் தரிய தாவதே.
 

     (இ - ள்.) சூழிநீள் முகத்தன துளைக்கைம்மாவொடு - முகபடாத்தை யணிந்த நீண்ட
துளையமைந்த கையையுடைய யானையோடே, மாழைநீள் மணி இவை எளிய - பொன்னும்
ஒளி நீண்ட மணியும் ஆகிய இவையிற்றைப்பெறுதல் எளிதேயாம். மாண்பினால் வாழும் நீர்
மக்களைப்பெறுதல் - பெருமையோடு வாழும் நல்ல தன்மை பொருந்திய
பிள்ளைகளைப்பெறுதல், ஆழி நீர் வையகத்து மாதரார்க்கு - ஆழம் பொருந்திய நீர்
நிலையாகிய கடலாலே சூழப்பெற்ற இவ்வுலகத்துப் பெண்களுக்கு, அரியது ஆவது -
அருமையான செயலாகும் (எ - று.)
அறிவறிந்த மக்கட்பேற்றை அடைதல் அரியதாகலின் இவ்வாறு, “வாழுநீர் மக்களைப்
பெறுதல் மாதரார்க்கு.................அரியதாவதே“ என்றார்.
“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற“ (குறள். 91)
என்றார் வள்ளுவனாரும்.

( 177 )

நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்

416. தகளிவாய்க் கொழுஞ்சுடர் தனித்துங் கோழிருள்
நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே
துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்
மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள்.