பக்கம் : 301
 

     (இ - ள்.) துள் இலாச் சுடர்மணி துளும்பு பூணினாய் - குற்றமற்ற ஒளி பொருந்திய
மணிகள் அசைகின்ற அணிகலன்களையணிந்தவளே, தகளிவாய்க் கொழுஞ்சுடர் தனித்தும் -
அகலினிடத்திலே ஏற்றப்பெற்ற கொழுவிய விளக்கொளியானது தனித்து நின்றாலும், கோழ்
இருள் நிகளவாய்ப்பிளந்து - மிகுந்த இருளை நீளமாகப் பிளந்து, அகம் சுடர நிற்கும் -
இல்லமானது ஒளிபெற விளங்கும், அதைப்போல, மகள் எலாத் திசைகளும் மலிர
மன்னினாள் - நம்முடைய மகளானவள் எல்லாத்திக்குகளினுந் தனது சீர்த்தியானது
விளங்கும்படி நிலை பெற்று நின்றாள் (எ - று.)

நங்குலத்தில் நாமனைவரும் புகழற்றவர்களாக இருக்கவும், நம் மகள் மட்டும் பெரும்
புகழுக்கு உரியவளாக விளங்குகின்றாள் என்று; தன் மனைவிக்குத் தெரிவிக்க விரும்பிய
அரசன் இவ்வாறு கூறினான்.

( 178 )

மகளாற்குலஞ் சிறப்படைந்தது என்றல்

417. வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி
நலம்புரி பவித்திர மாகு நாமநீர்
பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி
குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே.
 

      (இ - ள்.) நாமநீர் - கற்புச் சிறப்பினாலே கண்டார்க்கு அச்சத்தை யுண்டாக்குந்
தன்மை யமைந்திருத்தலுடன், பொலம்புரி மயிலனாய் - பொன்னாற் செய்யப்பட்ட மயிலைப்
போன்றவளே! வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி - வலம்புரிச் சங்கினிடத்திலே
தோன்றிய சிறந்த மணியானது, நலம் புரிபவித்திரமாகும் - நன்மையைச் செய்கின்ற
உயர்ந்ததாகும், அதைப்போல, பயந்த பூங்கொடி - நீ பெற்ற மகளான பூங்கொடியைப்
போன்ற சுயம்பிரபை, குலம்புரிந்தவர்க்கு எலாம் கோலமாகும் - நம்முடைய குலத்தை
விரும்பிய எல்லோருக்கும் அணியாகத் திகழ்வாள் (எ - று.)

வாயுவேகையின் மாண்பு கருதி வலம்புரி கூறினான். மணி - முத்து. பவித்திரம் - தூயது;
சிறந்ததுமாம், நாமம் - அச்சம்; நாம நீர் வலம்புரி என ஒட்டிக் கடல் எனினுமாம்.
பொலம்புரி மயில் - பொன்னாற் செய்த மயில். கோலம் - அணி.

( 179 )