பக்கம் : 308
 

- முகில்போல் இரவலர்க்குக் கைம்மாறு கருதாது நன்கொடையினைப் பொழியும் பெரிய
கைகளையுடையவனாகிய மருசி என்பவனையழைத்து, ஒரு சீரிய திருமுகம் சிறப்பொடு
ஈந்தனன் - ஒரு சிறந்த முடங்கலைக் கொடுக்கப் பெறவேண்டிய சிறப்புக்களோடு
கொடுத்தான், அவனும் - திருமுகத்தைப் பெற்றவனாகிய மருசியும் ஆரியன் கழலடி
வாழ்த்தினான் - அரசனுடைய வீரக்கழல்களை யணிந்த அடிகளை நன்மொழி
கூறிப்போற்றினான், (எ - று.)

காவலன் - சடிமன்னன். கையானை வருக என்று அழைத்து என்க. சிறப்பு-தூதர்க்குச்
செய்யும் சிறப்புக்கள். ஆரியன்-ஈண்டுச் சடிமன்னன்.

( 190 )

மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து
சேர்தல்

429. மன்னவன் பணியொடு மருசி வானிடை
மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த்
துள்ளினன் சுரமைநாட் டகணி சூடிய
பொன்னகர்ப் புறத்ததோர் பொழிலி னெல்லையே.
 

     (இ - ள்.) மன்னவன் பணியொடு - சுவலனசடியரசனுடைய கட்டளையோடு, மருசி -
மரீசி என்பவன்; மின்அவிர் முகில்குழாம் முழங்கும் வான்இடை வீதிபோய் - மின்னல் ஒளி
வீசுகின்ற முகிற்கூட்டங்கள் ஒலியைச் செய்யும் வானவீதியிலே சென்று; சுரமை நாட்டு
அகணிசூடிய - சுரமைநாட்டின் நடுவிடத்திலே பொருந்தியதாகிய; பொன்நகர்ப் புறத்தது -
போதனமா நகரத்திற்கு வெளியிடத்ததான; ஓர் பொழிலின் எல்லை - ஒரு பூங்காவின்
வரம்பை; துன்னினன் - அடைந்தான். (எ - று.)

மருசி என்னும் பெயர் மரீசி என்றுங் கூறப்பெறும். மருசியானவன் விசும்பாறாகச் சென்றான்
என்பதை இரண்டாவதடி விளக்கி நின்றது. விண்ணக வீதியில் வேறு முழக்கம் இன்மையால்
“மின்னவிர் முகிற்குழாம் முழங்கும் வீதி“ என்றார்.

( 191 )

430. புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப்
பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென