இலவம் - புன்னையுடனே இலவ மரங்கள்; புடை அவிழ்வன - புதுமலர் களையுடையன; பக்கங்களிலே மலர்வனவாகிய புதிய மலர்களையுடையன; கமழ்பாதிரி - மலரால் நறுமணத்தை வெளிப்படுத்தும் பாதிரிமரங்கள், கடிஅவிழ்வன - மணத்தை வெளிப்படுத்துவன; சாகம் - தேக்கு மரங்கள்; கலிகளிகைய - செழிப்பான மலர் மொட்டுக்களை யுடையன; இடை - இம்மரங்களுக்கிடையே; அவிழ்வன - பல செடி கொடிகளிலிருந்து மலர் வனவான; மலர்அளவுஇல - பூக்கள் கணக்கற்றனவாம்; இது பொழிலினது இயல்பு - இஃது அந்த புட்பகரண்டமென்னும் பூங்காவினது தன்மை யாகும் (எ - று.) இச் செய்யுளில் கோங்கு முதலிய சில மரங்களைக் கொண்டிருப்பதைக் கூறிப் பொழிலின இயல்பை ஒருவாறு முடிக்கின்றார். கோங்கின்முகை கொங்கையை ஒத்திருக்க அது மலர்ந்த நிலையில் தட்டுப்போல விளங்குமாதலின் கோங்கு மலர்ந்தவற்றை கோங்கம் குடையவிழ்வன கொழுமலரின என்றார். |