பக்கம் : 315
 

நல்வினையாலே மகிழ்ச்சி பெற்றவரின்; மதி மகிழ்வுற - மனங்களிப்பையடைய; விரவுற்றன
- பொருந்தியுள்ளன. (எ - று.)

வண்டு முதலிய பறவைகள் இனிதாகத் தங்கப்பெற்ற அந்தப் பொழில் நல்வினையோர்
அமர்ந்து மகிழ்ச்சியடையுமாறு அமைந்துள்ள தென்பதாம். வண்டு தும்பி அறுகாற்
பறவையின் வகைமாறுபாடுகள் “தும்பி வண்டொடு தூவழி யாழ்செய“ என்னுஞ்
சிந்தாமணியுங் காண்க. மணிவண்டு - நீலமணிபோன்ற வண்டு என்று உரைப்பினும்
பொருந்தும். குதிமகிழ்தல் - துள்ளிவிளையாடுதல்.

( 6 )

மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்

437. அதுவழகுத னகமகிழ்வுற 1வலர்தாரவ னடைய
இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி 2யிகவா
விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய 3வேரிப்
பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான்.
 

     (இ - ள்.) அது அழகு - அப்பொழிலினுடைய அவ்வாறான அழகைக் கண்டு; தன்
அகம் மகிழ்வு உற - தன்மனம் மகிழ்ச்சியை அடைய; அலர்தாரவன் - மலர்ந்த
மலர்களினாலே தொடுக்கப்பெற்ற மாலையைப் புனைந்த மரீசியானவன்; அடைய -
பொழிலைச் சேர; இது அழகியது - இஃது அழகாக இருக்கின்றது; இவண் வருகஎன -
இவ்விடத்தே வருவாயாக என்று, எழுபுள் ஒலி - தோன்றுகின்ற பறவைகளின் ஒலியால்;
இகவா - அடைந்த இடத்தைவிட்டு நீங்கி; விதி - முறைப்படி; வழகுஉடை - வழுவழுப்பை
உடைய, விரிஇலையிடை - பரந்துள்ள இலைகளினிடையே; வெறி விரவியவேரி - நறுமணம்
பொருந்திய தேனைக் கொண்டனவும்; பொதி அவிழ்வன - முறுக்கு விடுபடுவனவுமான;
புதுமலர் - புதிய மலர்களைக்கொண்ட; அணி - அழகிய; பொய்கைக் கரைபுக்கான் -
தடாகத்தின் கரையிலே போய்ச் சேர்ந்தான். (எ - று.)

பறவைகள் வரவேற்புக் கூறுதலைப்போன்று ஒலிக்க மருசி பொய்க்கைக்கரையை
அடைந்தான் என்க. வழகு இலைசெறிபுள்ளி என இயம்பலும் பொருந்தும்.

( 7 )


(பாடம்) 1. அலர்புகழவனடைய. 2. அவியா. 3. எரிய.