பக்கம் : 323
 

அச்சுவக்கிரீவனை அடுவான் என்னும் இச்செய்தியை அங்கத நிமித்திகன் பயாபதி
மன்னனிடம் கூறவில்லை.

( 16 )

தன்னை அரசன் அங்கு இருக்குமாறு
அமர்த்தியதைக் கூறுதல்

447. ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்
தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி
1ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன
2நீங்கல னிருந்தன னெடுந் 3தகையி தென்றான்.
 

     (இ - ள்.) ஆங்கவன் மொழிந்தபின் அடங்கலரை அட்டான் - அப்பொழுது
அங்கதப் புரோகிதன் அவ்வாறு சொன்ன பிறகு பகைவர்களையழித்த பயாபதி மன்னன்
ஆனவன், தேம் கமழ் பொழில் - தேன்மணம் வீசுகின்ற இந்தச் சோலையில், திகழ்
சிலாதலம் இது ஆக்கி - விளங்குகின்ற நிலாவட்டக்கல் இதனைச் செய்து, ஈங்கு அவன்
இழிந்தபின் - இவ்விடத்திலே அந்த விஞ்சையர் தூதுவன் வந்து இறங்கிய பிற்பாடு, எழுந்து
எதிர்கொள் என்ன - நீயெழுந்து அவனை எதிர்கொள்வாயாக என்றுகூறி எனக்குக்
கட்டளையிட்டுள்ளதனால், நீங்கலன் இருந்தனன் - நான் இவ்விடத்தைவிட்டு நீங்காதவனாக
இருந்தேன், நெடுந்தகை - பெருமைக்குணமுடையவனே!, இது என்றான் - இந்த
நிலாநிழற்கல்வந்த வரலாறு இதுவாகும் என்று கூறினான், (எ - று.)

இச்செய்யுளால் துருமகாந்தன் நிலாவட்டக்கல் அமைக்கப்பட்ட காரணத்தைக் கூறிமுடித்தான்.

( 17 )

மரீசி தூதுவந்து பொழிலில் தங்கியுள்ளமையை
யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்துன்பை
மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்

448. என்றவன் மொழிந்தபி னிருந்தன னிருப்பச்
சென்றவன் வழிச்1சிரமை தீர்மினென நால்வர்
 

(பாடம்) 1. ஈங்கிவன். 2. நீங்கலின். 3. தகைய தென்றான். 4. சிரமம்.