(இ - ள்.) அவர் - அம்மகளிருடைய, அடித்தலம் - அடிகள்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பினை, மலைத்தன - தம்மியற்கை நிறத்தாலே வென்றன, கடி அல்குல் - அம்மகளிரின் காவலமைந்த அல்குற்றடம், அரற்றும் - ஆரவாரிக்கின்ற, கலைத்தலை மலைத்து - மேகலையிடத்தை வருத்தி, விரிகின்ற - விரியாநின்றன, முலைத்தலை - அம்மகளிரின் முலையிடத்தே, முகிழ்த்து - தோன்றிய, ஒளி - இயற்கையொளியாலே, முத்தம் - முத்து மாலைகள், துளும்பியுள - சுடர்மிக்குத் திகழ்ந்தன, சாயல் - அம் மகளிரின் சாயலோவெனில், மலைத்தலை - மலையிடத்தே வாழும், மயிற்கணம் - மயிலின் கூட்டத்தை, மருட்டும் - ஒக்கும், (எ - று.) முகிழ்த்த என்றது ஈறுகெட்டு முகிழ்த்தொளி எனப்புணர்ந்தது. மயிற்கணம் மருட்டும் - மயிற்கணமோ எனக் காண்போரை மருட்டும் என்க. |
(இ - ள்.) கணங்கெழு கலாவம் ஒளிகாலும் - கூட்டமாகப் பொருந்திய மணிக்கோவையானது ஒளியைச் செய்யும், அகல் அல்குல் இடத்தாய் - அகன்ற அல்குலுக்கு மேலிடத்ததாகிய, சுணங்குஎழு - தேமல்பொருந்திய, தடத்துணை முலைச்சுமை - பெருத்த இரண்டாகிய கொங்கைச் சுமையினால், வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்கு - வளைந்தும் அசைந்தும் வருத்தத்தை யடைந்த இடைக்கு, இணங்கு துணையாய் - பொருந்திய துணையாகி, ஞிமிறு எழுந்து இரங்கின - வண்டுக் கூட்டங்கள் எழுந்து இரங்கினாற்போல ஒலித்தலைச் செய்தன, (எ - று.) |