பக்கம் : 327
 
tr>

இடையின் வருத்தங்கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க.

( 22 )

453. முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்
நிலைத்தொழில 1வென்றுள 2நினைத்தொழுக வின்பக்
கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம்
3கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர்.
 

     (இ - ள்.) நிலைத் தொழில - பிறவிகளிலே சுழலாதபடி நிலைபெறுத்தும் தொழில்
உடையவாய், உளம் - மாந்தர் மனங்கள், வென்று - பொறிகளை அடர்த்து வென்று,
நினைத்து - தியானித்து, ஒழுக - தவத்திலே நின்று ஒழுகுமிடத்தே, இன்பக்
கலைத்தொழில்கள் - காமநூல் கூறும் தொழில்கட்கும், காமன், எய்கணைத் தொழில்கள் -
மதவேள் எய்யாநின்ற மலர்க்கணைகளின் தொழில்கட்கும், முலைத்தொழில் - மகளிரின்
முலைகள் முனிகின்ற தொழில்கட்கும் பிறப்பிடமாகிய, கொலைத்தொழில் கொள் -
கொல்லுந் தொழிலைக்கொண்ட, வாள் - வாள்போன்ற, கணின் அகத்த - கண்ணிடத்தே
உண்டாகின்ற, குறி - காமக் குறிப்பு, சிலைத்தொழிலின் - வில்லாலே செய்யுந்தொழிலைப்
போன்று, ஆருயிர் - அவருடைய சிறந்த உயிரை, முருக்கும் - கொல்லாநிற்கும், (எ - று.)

வீடுபேற்றைக் கருதிப் பொறிகளை வென்று தியானஞ் செய்யுமிடத்தே இம்மகளிரின் கட்குறி
அவர்களைக் கொல்லாநிற்கும் என்பதாம்.

வேளைவென்ற முகத்தியர் வெம்முலை ஆளைநின்று முனியும், என்பதனால் முலையின்
தொழிலை உணர்க.

( 23 )

454. துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை 4முத்தம்
பொடித்தவியர் நிரொடுபொ லிந்தசுட 1ரோலை
அடுத்ததில கத்தினொட ணிந்தவள 6கத்தார்
வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார்.
 

(பாடம்) 1. வென்றே. 2. நினைத்தெழுக. 3. கொலைத் தொழில வாட்கணகத் தனகள் கண்டீர். 4. முத்தொடு, முத்தமொடு. 5. ஓலையொடு. 6. கத்தொடு.