பக்கம் : 333
 

அப்படைப்புக் கடவுள், உலகில் பிறவிகள் இடையறுந்தொழியாமைக்கு மீண்டும் ஒரு
வழியினைப் படைத்த முறையாம் இது, என்னை பாவம் - இஃதொரு பாவம் இருந்தபடி,
(எ - று.)

( 32 )

463. வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளர்ந்த
சாம லேகைகண் மயிர்நிரை 1யலதல மீது
2காம நீரெரி யகத்தது கனன்றெழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணைமுலை யுறவே.
 

     (இ - ள்.) வாமம் மேகலை முதல் நின்று - இம்மகளிருடைய அழகிய மேகலை
அணியின் அடிப்பகுதியிலிருந்து, வயிற்றிடை - வயிற்றின் நடுவிடத்தே, வளர்ந்த -
வளர்ந்துள்ள, சாமம் - கரிய, லேகைகள் - கோடுகள், மயிர்நிரை அல - மயிர் ஒழுங்கல்ல,
தலமீது - அல்குற்றடத்தின்மீது, காம நீர் எரி - காம நீர்மையுடையதொரு நெருப்பு,
அகத்தது - உள்ளிடத்தே அமைந்தது, கனன்றெழ - பற்றிஎழாநிற்ப, நிமிர்ந்த - அந்
நெருப்பின்கண்ணிருந்து உயர்ந்தெழுந்த, தூம லேகைகள் - புகையினாலாய கோடுகள்,
பொடித்தன - முளைத்தன, துணை முலையுற - இரண்டாகிய முலையினை
அடைதற்பொருட்டு, (எ - று.)

இம்மகளிரின் வயிற்றிற் றோன்றும் கரியகோடு இவர் அல்குலகத்தே யிருந்து கனலும்
காமத்தீயின் புகை முலையினை எய்தச் செல்லுதலால் ஆகிய புகைக்கோடு என்பதை
அறியார், மயிர்க்கோடு என்பர் என்பதாம்.

( 33 )

சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்

464. சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்
வனங்கள் காப்பவ ருளரென 3முனிவமற் றன்றேல்
தனங்க டாந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த
கனங்கொள் 4வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர்.
 

     (இ - ள்.) சில சனங்கள் தாம் தவங்களைத் தாங்குதும் - மக்களிற் சிலபேர் தாங்கள்
தவங்களைச் செய்கின்றோம், எனப் போய் - எனச் சென்று,
வனங்கள் காப்பவர் உளர்என - காட்டைக் காவல் புரிபவர்களாக இருக்கிறார்கள் என்று,
தனங்கள்தாம் - இந்த மங்கையரின் கொங்கைகள்,


(பாடம்) 1. யெனினல. 2. காம நீளெரி. 3. முனிந்துமற்றன்றேல். 4. வெம்முலை.