பக்கம் : 335
 

மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்

466. என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்
சென்று கற்பக 1வனமன செறிபொழி லடைந்தார்
இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த
வென்றி காமனுக் குரைத்துமென் 2றிரைத்தளி விரைந்த.
 

     (இ - ள்.) என்று - மேற்கூறியவாறு, மைந்தர்கள் இடர்உற - காளையர்கள்
துன்பத்தையடைந்து வருந்த, எழுதிய கொடிபோல் - எழுதப்பெற்ற ஓவியக்
கொடியைப்போல, சென்று - போய், கற்பகவனம் அன - கற்பகச் சோலையைப் போன்ற,
செறிபொழில் அடைந்தார் - மரஞ்செடி கொடிகள் நெருங்கப்பெற்ற பூங்காவை
அடைந்தார்கள், இன்று - இன்றைக்கு, காமுகர் படையினை இடர்பட நடந்த - காமநோக்க
முடையவர்களுடைய கூட்டம் துன்பத்தை யடையுமாறு சென்ற, வென்றி - வெற்றியை,
காமனுக்கு உரைத்தும் என்று - காமனுக்குச் சொல்லுவோம் என்று, அளி இரைத்து விரைந்த
- வண்டுக் கூட்டங்கள் ஒலிசெய்துகொண்டு விரைந்து சென்றன, (எ-று.)

காளையர் உள்ளத்தைக் கலக்கியவாறே மங்கையர்கள் பொழிலை யடைந்தார்கள்.
அம்மங்கையரின் செயலைக் காமற்குரைப்பான் கடுகிச் செல்லுதலைப் போன்று
வண்டுக்கூட்டங்கள் விரைந்து சென்றன.

( 36 )

வேறு
பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்

467. ஆடைகைத் தலத்தொருத்தி 3கொண்டதங் கடைப்பைதன்
மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்
சேடிகைத் தலத்தன செறிமணித் 4திகழ்வசெங்
கோடிகைத் தலத்தன 5குளிர்மணிப் பிணையலே.
 

     (இ - ள்.) அங்கு - அப்போது அங்குவந்த பெண்களுள், ஒருத்தி கைத்தலத்துக்கொண்டது - ஒருத்தி தன்னுடைய கையினிடத்திலே


(பாடம்) 1. வனமவன்செறி. 2. இரைத்தன சுரும்பே. 3. கொண்டடைப்பை தன்னொடு. 4. திகழ்வனசெங். 5. குளிமணிப் பிணையலே.