(இ - ள்.) வெறிகமழ்வன அணிகிளர் நறுநீர் - பலவகை மணங்கள் பொருந்திய மேன்மையமைந்த நல்ல நீரில், ஆட்டினார் - மரீசி குளிக்கும்படியாகச் செய்தார்கள், நறுஞ்சாந்தமும் சிறிது தீட்டினார் - நல்ல சந்தனத்தையுஞ் சிறிது பூசினார்கள், சிலர் - சில மாதர்கள், நறுமலர் மெய்கமழச் சூட்டினார் - நல்ல மணம்மிக்க மலர்களை உடலிலே மணங்கமழும்படியாக அணிந்தார்கள். அறுசுவை அடிசில் ஊட்டினார் - ஆறுவகை இனிமைகளும் அமைந்த உணவை உண்பித்தார்கள். அவன் அமரருள் ஒருவன் ஒத்து ஒளிர்ந்தான் - வழிபாடுகளையெல்லாம் பெற்ற அம் மரீசியானவன் தேவர்களுள் ஒருவனைப் போன்று திகழ்ந்தான். (எ - று.) பணிப்பெண்கள் மருசிக்குச் செய்யவேண்டியவைகளை யெல்லாஞ் செய்தனர். அதனால் மருசி விண்ணகத்துத் தேவர்களில் ஒருவனைப் போன்று சிறந்து விளங்கினான். |
(இ - ள்.) வயங்குதொல் புகழ் அம்பரசரன் - விளங்குகின்ற பழைமையான சீர்த்தியையுடையவனும் விசும்பாறாகப் போக்கு வரவு செய்பவனுமாகிய மரீசியானவன், வயந்தமுன்னிய திலகை - வயந்தம் என்னும் பெயருக்கு முன்னாலே திலகை என்பது சேரப்பெற்ற வயந்த திலகை, கல்லியாணிகை - கல்லியாணிகை, வடிவார் வியந்தசேனை - அழகு பொருந்திய வியந்த சேனை, மென் கமலமாலதை - மென்மைத்தன்மை பொருந்திய கமலமாலதை, எனவிளம்பும் - என்று சொல்லப்பெறும், இயங்கு பூங்கொடி அனையவர் - அசைகின்ற பூங்கொடியைப் போன்றவர்களது, |