இயல்புகள் நினையா - அழகியதன்மைகளையெல்லாம் எண்ணிப்பார்த்து, மகிழ்ந்து இருந்தான்-களிப்புடன் அமர்ந்திருந்தான். (எ - று.) மருசிக்குச் சிறப்புச் செய்தற்குவந்த மங்கையர்கட்குத் தலைவராயினார் பெயர் வயந்ததிலகை, கல்லியாணிகை, வியந்தசேனை, கமலமாலதை என இப்பாட்டால் குறிப்பிடுகிறார். இவர்கள் செய்யும் உபசாரத்தினை மருசி பார்த்து வியந்துமகிழ்ந்திருகின்றான் என்க. |
(இ - ள்.) ஆங்கு எழில் பொலிந்தவன் இருந்தபின் - அப்புட்பமாகரண்டப் பூங்காவிலே அழகிற் சிறந்து விளங்குபவனாகிய மரீசியானவன் நிலா நிழற்கல்லிலே அமர்ந்திருந்த பிற்பாடு, அலங்குதார் - அசைகின்ற மாலையினையும், வீங்கு எழில் - மிகுந்த அழகையும், பொலிந்ததானை - விளங்குகின்ற படையையுமுடைய, வேந்தன் ஏவ - பயாபதி மன்னன் விஞ்சையர் தூதுவனாகிய மரீசியை அழைத்து வருமாறு கட்டளையிட, வீவு இல்சீர் - அழிதலில்லாத சீர்த்தியையுடைய, பூங்கழல் பொலங்குழைத் திவிட்டனோடு - அழகிய வீரக்கழலையும் பொன்னினால் ஆகிய காதணியையும் அணிந்த திவிட்டனோடு, சங்கவண்ணன் - சங்கின் நிறம்போன்ற வெண்ணிறத்தையுடைய விசயன், போர்க்கதம் - போர்செய்யுந் தன்மையுள்ள சினத்தைக் கொண்டதும், தாங்கு எழில் பெருங்கையானை ஏறினான் - மிகுந்த அழகையும் பெரிய கையையுமுடையதாகிய யானைமீது ஏறினான். (எ - று.) மருசியை அரண்மனைக்கு அழைத்துச் செல்லும்பொருட்டு விசய திவிட்டர்கள் புறப்பட்டு வருதல் இதில் குறிக்கப்படுகிறது. |