பக்கம் : 343 | | 477. | 1கொண்டலார்ந்த பொன்னெனிக் குழற்கொடிக்கு ழாமனார் மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம் குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு 2கொண்டணீஇ 3வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே. | (இ - ள்.) பொன்என் - திருமகள் என்று கூறத்தகுந்த, இக்குழல் கொடி குழாம் அனார் - இந்தக் கூந்தலையுடைய பூங்கொம்பின் கூட்டம்போன்ற மகளிருடைய, கொண்டல் ஆர்ந்த மண்டலம் - முகிலிடையே பொருந்திய வட்டவடிவம், நிறைந்த - முற்றுப்பெற்ற, திங்கள் வட்டம் ஒத்த - திங்களினது வடிவத்தை ஒத்த, வாள்முகம் - ஒளியை உடைய முகங்கள், குண்டலம் - குண்டலங்களும், கொழும்பொன் ஓலை - கொழுவிய பொன்னால் இயன்ற ஓலைகளும், என்று - என்று கூறப்பட்ட, இரண்டு கொண்டு - இருவகை அணிகலன்களாலும், அணீஇ - ஒப்பனை செய்யப்பட்டு அம் மகளிர் சூடிய, வண்டலர்ந்து - வண்டுகள் மொய்க்கப்பெற்று. மாலைதாழ்ந்து - மாலைகள் தூங்கப்பட்டு, மாடவாய் - மாளிகையின் வாயில்கள், மறைந்த - மறையலாயின. (எ - று.) மாடவாய் மகளிரின் குண்டலப் பொன்னோலை மாலை முதலியவற்றால் மறைந்தன என்க. | ( 47 ) | 478. | கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்4து ணர்துதைந் தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய் மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார் ஆடுமஞ்ஞை 5கோடுகொள்வ தென்ன லாவ தாயினார். | (இ - ள்.) கூது தும்பி - கூடாநின்ற வண்டுகள், குழல் - கூந்தலின், ஊடுதோய் - அகத்தே பொருந்திய, தொகை - தொகுக்கப்பட்ட, துணர் - பூங்கொத்துக்களை, துதைந்து - உளர்ந்து, ஓடும் - ஊராநின்ற, மேல் எருத்திடை - உயரிய பிடரின் கண்ணே, குலைந்த கோதையோடு - அணி குலைந்து வீழ்ந்த மாலையோடே, உலாய் - அசைந்து, மாடவாயின் - மாடத்தின் வாயிலிடத்தே, மாலை - மாலைகள், ஞால - தூங்கும் |
| (பாடம்) 1. கொண்ட லர்த்த பொன்னலிக் குழற்கொடி. 2. கொண்டணிந்து. 3. வண்டணிந்து. 4. துணர்ந்துதைந்து. 5. கோடுகொள்ள வென்ன வன்ன ராயினார். | | |
|
|