படி, மாடம் - அம்மாடத்தை, ஏறும் - ஏறாநின்ற, மாதரார் - மகளிர்கள், ஆடுமஞ்ஞை - ஆடுகின்ற மயில்கள், கோடு - மலைச் சிகரங்களில், கொள்வ - ஏறுவன, என்னலாவது - என்று கூறுமாறு, ஆயினார் - தோன்றலாயினர். (எ - று.) குழலிலே சூட்டிய கோதைகள், பிடரிலே வீழ்ந்தசையும்படி மாடத்திலே ஏறுமாதர் மலைச்சிகரத்தே ஏறும் மயிலை ஒத்தார் என்க. |
(இ - ள்.) தொண்டைவாய் மடந்தைமார்கள் - கொவ்வைக்கனி போன்ற வாயினையுடைய மகளிர்கள், சுடிகை - நெற்றிச் சுட்டியை உடைய, வட்ட - வட்டமான, வாண்முகம் - ஒளிபொருந்திய முகங்களை, கொண்ட - தம்மகத்தே கொண்டுள்ள, கோல நீரவாய - அழகுடைய தன்மையை உடையனவாகிய, கோடி - சிகரங்களையுடைய, மாடவாயெலாம் - மாளிகையின் மேலிடமெல்லாம், வண்டு சூழ்ந்த - வண்டுகள் மொய்த்த, பங்கயமலர்க்குழாம் - தாமரைப்பூவின் கூட்டம், இணைப்படூஉ - பிணைக்கப்பட்ட, கெண்டையோடு - கெண்டைமீன்களோடே, நின்றலர்ந்த - நின்று மலர்ந்துள்ள, கேழவாய் - தன்மையுடையனவாய், கிளர்ந்த - விளங்கின. (எ - று.) தாமரைமலர் மகளிர்முகத்திற்கும், இணைக்கயல்கள் கண்களுக்கும் உவமைகள். |