(இ - ள்.) வேய் - மூங்கிலை, மறிந்த - தோற்று ஓடச்செய்த, தோள் - தம் தோள்கள், விளர்த்து - பசலையான் வெளிறி, வெவ் உயிர்ப்பொடு - வெவ்விய பெருமூச்சோடே, உள்விராய் - நெஞ்சு கலந்து, தோ - கொய்சகம், மறிந்த - மறிந்துகிடந்த, சூழ் துகில் நெகிழ்ந்து - சுற்றப்பட்ட ஆடையைக் குலைத்து, உடுத்து - மீண்டும் உடுத்து, வீழ்ந்து - கீழ்வீழ்ந்து, அசைஇ - அசைந்து, பூ - பூவினை, மறிந்த - மடங்கிய, தேங்குழல் - இனிய கூந்தலிடத்தே முடி பொதிந்து - உச்சியிலே சூட்டி, வீழ்த்து - அவற்றைப் பின்னர் வீழப்பண்ணி, உலாய் - உலாவி, மறிந்த - செருகிய, முல்லைவாய - முல்லை மலரிடத்தனவாகிய, தாது - பூந்தாதுகளை, உகுத்து - உதிர்த்து, உடங்கினார் - உழல்வாராயினர். (எ - று.) தாம் : அசை. |
(இ - ள்.) அங்கராகம் வீறு இருந்து அணிந்த - நறுமணப் பூச்சுக்கள் பெருமை பொருந்தப் பூசப்பெற்று அணியப்பெற்ற, ஆரம் - மாலைகள், மாகுலாய் - திருமகள் நோக்கம் அமையப்பெற்றனவாகப் பொருந்தி, மங்கைமார்கள் கண்ணும் வண்டும் மாலையும் மனங்களும் - மங்கைமாரின் கண்களும் வண்டுகளின் வரிசையும் மனங்களும் என்ற இவைகள், தங்கு மார்பின் - தங்கப்பெற்ற திருமார்பினையுடைய, நம்பிமார்கள் தானை - |