பக்கம் : 352
 

தெளித்த நீர்களின்மேல், அளிகோதுகின்ற போதுகொண்டு சிந்தி - வண்டுகள் குடைகின்ற
மலர்களைக் கொண்டு தூவி, நம்பிமார்களை - விசய திவிட்டர்களை, போதுக என்று -
இங்கு வருக என்று கூறி, தம் தளிர்க்கையால் - தம்முடைய தளிர்களாகிய கைகளினால்,
இடங்கள் காட்டுகின்ற போல் - அவர்கள் தங்குதற்குரிய இடங்களைக் காட்டுவனபோல்
பொலிந்த - விளங்கின. (எ - று.)

மாதவிக்கொடிகள் தேறலைத் துளித்தலும் போதுகளைச் சிந்துதலும் தளிரையசைத்தலும்
இயற்கை. விசய திவிட்டர்கள் பொழிலுக்கு வந்தபோது மாதவிக் கொடிகளினிடத்
துண்டாகிய இயற்கைத் தன்மை விசய திவிட்டர்களுக்கு வரவேற்பாக உரைக்கப்பட்டது.

( 61 )

பூங்காவின் பொதுக்காட்சி

492. போதுலாய வேரிமாரி சாரலாய்ப்பொ ழிந்துதேன்
1கோதலா னெரிந்ததாது கால்குடைந்து 2கொண்டுறீஇ
3மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்
தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே.
 

     (இ - ள்.) போது உலாய வேரிமாரி - மலர்களினின்றும் பெருகுகின்ற தேன்
மழையை, சாரலாய்ப் பொழிந்து - சாரல் மழையைப்போலப் பெய்து, தேன் கோதலால் -
தேனை யுண்ணுவதால், பெரிந்த தாது - நெரிந்துதிர்ந்த மகரந்தப் பொடிகளை, கால்
குடைந்துகொண்டு உறீஇ - கால்களினாற் குடைந்து கொண்டு பொருந்தி, மாது உலாய
வண்டு இரைத்து - அழகு பொருந்திய வண்டுகளால் ஒலி செய்து, மங்குல்கொண்டு கண்
மறைத்து - முகிலின் தன்மையை மேற்கொண்டு பார்ப்பவர்களின் கண்களை மறையச்
செய்து விளங்குந்தன்மையால், சோலைவண்ணம் - அந்தப் பூங்காவின் பொதுத்தன்மை,
ஏதிலார்க்கு இயங்கல் ஆவது அன்று - பிறர்க்குப் போக்கு வரவு செய்யக்கூடிய
நிலைமையை உடையதன்று. (எ - று.)

மழைபொழிதல் இரைத்தல் கருநிறம் பெற்றிருத்தல் என்பன முகிலுக்குரிய பண்புகளாம்.
வேரிமழை பொழிதல், வண்டுகளாற் பேரொலி செய்தல், அடர்ந்த மரங்களால் கருநிறம்
பெறுதல் என்ற இத்தன்மையால்


(பாடம்) 1. கோதெலாம். 2. கொண்டுலாய். 3. மாதுலால.