(இ - ள்.) போது உலாய பூம் பொதும்பர் மேல - மலர்கள் அசைகின்ற அழகிய பொழிலின்மேல், தென்றல் - தென்றற் காற்று, வீசலால் - வீசுதலாலே, வல்லி - பூங்கொடிகள், தாது உலாயபோது அணிந்து - தாதுக்கள் பொருந்திய மலர்களை அணிந்தனவாய், தாழ்ந்து - வணங்கி, தாமவார்குழல் மாதரார்கள் போல் - மலர்மாலையணிந்த நீண்ட கூந்தலையுடைய மகளிரைப் போன்று, மைந்தரை - விசய திவிட்டரை, மார்பு புல்லி - மார்பிடத்தே பொருந்தி அணைத்து, காதலால் - காதலுடைமையாலே, வளைப்பபோன்று - அவரை வளைத்துக் கொள்வனபோல, காவினுள் - அப்பூம்பொழிலிடத்தே, கலந்த - அவரோடு கலந்தன (எ - று.) தென்றல் இவ்வாறு வீசியது என்க. |
(இ - ள்.) வண்டு - வண்டுகள், புல்லி - தழுவிக்கொண்டு, அமர்ந்து - பொருந்தி, தங்குபூந்தழைப் பொதும்பு இடை - தங்கப்பெற்ற பூவோடு கூடிய இலைகளைக்கொண்ட அச்சோலையினிடத்தில், மல்லிகைக் கொடிக்கலந்து - மல்லிகைக் கொடிகள் சேரப்பெற்று, மௌவல்சூட - முல்லைக் கொடியையும் |