பக்கம் : 356
 

ஒளிபொருந்தியவனாகிய விசயனையும் - நீல்நிறக் கருங்கடல் நிகர்க்கும் மேனியானையும் -
நீலநிறத்தைக் கொண்ட பெரிய கடலை யொத்திருக்கும் நிறமமைந்த உடலையுடையவனாகிய
திவிட்டனையும், கண்மலர்ந்து - கண்களை நன்கு திறந்து, தன் நூல்நெறிக்கண் மிக்க
நீர்மைஒக்க - தான்கற்ற உடலிலக்கண நூலிலே சொல்லப்பெற்ற சிறந்த தன்மைகளானவை
பொருத்தமாக அமைந்திருக்கக் கண்டு, மகிழ்ந்து நின்று நோக்கினான் - மகிழ்ச்சியை
அடைந்து நன்றாகப் பார்த்தான். (எ - று.)

விசய திவிட்டர்களிடம் நல்லாடவர்க்குரிய குணங்குறிகள் யாவும் அமைந்திருத்தலை
மருசிகண்டு வியப்புடன் நோக்குகின்றனன் என்க. விசயன் வெண்ணிறத்தா னாகையால்
‘பானிறக் கதிர்நகை பரந்தசோதி யான்‘ எனப்பட்டான். திவிட்டன் கருநிறத்தானாதலால்
‘நீனிறக் கருங்கடல் நிகர்க்கு மேனியான்‘ எனப்பட்டான். கருமை பெருமை மேற்று.

( 67 )

மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்

498. வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன்1வி யந்துநீள்
நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்கலன்
கால்கள்கொண்டு 2கண்ணிகாறு முண்மகிழ்ந்து 3கண்டுகண்
மால்கொள்சிந்தை 4யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்.
 

     (இ - ள்.) விஞ்சையன - மரீசியானவன, நீளநூல்கொள் சிந்தை - பெரிய
நூல்களிலே சென்று அறிந்த தன்மனமும், கண்கள் தாவ - தன் கண்களும் அவர்
மேற்படரா நிற்ப, வேல் கொள் தானை வீரர் தம்மை - வேற்படையைக் கையிற்கொண்ட
படைவீரர்களான விசயதிவிட்டர்களை, வியந்து நோக்கி நோக்கி ஆர்கலன் -
வியப்படைந்து பன்முறையும் பார்த்தும் மனநிறைவு கொள்ளாதவனாகி, உள்மகிழ்ந்து -
மனதிற்குள்ளே களிப்படைந்து, கால்கள் கொண்டு கண்ணிகாறும் - அடிகள் முதற் கொண்டு
முடிமாலை வரையினும், கண்கண்டு - கண்களாற் பார்த்து, மால்கொள் சிந்தையார்கள்போல
- பித்தரைப்போன்று, மற்றும் மற்றும் நோக்கினான் - மேன்மேலும் பார்த்தான், (எ - று.)
 


(பாடம்) 1. வியந்து நின்று. 2. கண்ணிதாரு. 3. கண்டுகண்டு. 4. யார்கொள் போல.