பக்கம் : 37
 
     தம்மிடத்தே பெற்றதன்றிக் களிப்பினையு முடைய பார்வையால்; தம் - தங்களுடைய;
தேன் அளாம் உருவம் கண்ணி-தேன் பொருந்திய அழகிய மாலையையுடைய;
செல்வர்தோள் திளைக்கும் மாடம்-கணவர்களுடைய தோள்களைத் தழுவி மகிழும்
மாளிகையானது; கான் அளாம் காமவல்லி கற்பகம் கலந்த - மணங்கலந்த காமவல்லி கற்பக
மரத்தைத் தழுவிய; கண் ஆர் - இடத்தைத் தன் உச்சியிலே உடையதும்; வான்
அளாய்-வானத்தை நெருங்கி; மலர்ந்து தோன்றும் - அக்காமவல்லியும் கற்பகமும்
மலரப்பட்டுத் தோன்றாநின்ற; மணிவரை அனையது ஒன்று-அழகிய குன்றத்தை ஒப்பதாம், (எ - று.)

     மாடம் மணிவரை அனையது ஒன்று என்று இயைக்க. கண்ணார்வரை; தோன்றும்
வரை எனத் தனித்தனி யியைக்க.

     மான்-மானினது மருண்டதன்மை. மதர்வை-மயக்கம்: அரி-செவ்வரி. உருவம்-அழகு.
அந்நகரத்துச் செல்வர் மாடம் ஒவ்வொன்றும் மணிவரை அனையது என்பது கருத்து.

     மகளிர் தங்கணவரைத் தழுவித் திளைத்தற்குக் காமவல்லி கற்பக மரத்தைத்
தழுவியிருத்தலுவமை என்க. “திருநிறக் காமவல்லி திருக்கவின் கொண்டு பூத்துப் பெருநிறங்
கவினியார்ந்த கற்பகம் பிணைந்ததேபோல்“ என்றார் சிந்தாமணியினும்.

( 5 )

இதுவுமது
வேறு

41. அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்
இகலின மலையொடு மாட மென்பவே.
 

     (இ - ள்.) அகில்எழு கொழும்புகை-அகிற்கட்டை புகைக்கப்படுதலினால் எழுகின்ற
மிகுந்த புகையானது; மஞ்சின் ஆடவும்-முகில்கள்போல அசைந்து தோன்றுதலாலும்;
முழா-மத்தளங்கள்; முகில் இசை என முரன்று விம்மவும்-முகிலினது இடியைப்போல
ஒலித்து மிகுதலாலும்; துகிலிகை கொடி அனார்-ஓவியத்திலெழுதப்பெற்ற பூங்கொடியை
ஒத்தவர்களான மகளிர்; மின்னின் தோன்றவும் - மின்னல்போல விளங்கிக்