(இ - ள்.) இன்னவன் - இன்னான், இன்னநீரான் - இன்ன தன்மையை உடையான், (அவன்) இன்னவே எய்துக என்று - இப்படிப்பட்டவற்றையே அடைக என்று, முன்னவன் செய்த மொய்ம்பின் - முதற் கடவுள் விதித்த விதிப்படியே, வினைகளே - அவரவர்களுடைய இருவினைகளே, முயல்வது அல்லால் - முயற்சி புரிகின்றன அஃதல்லாமல், பின்னவன் பிறந்து - ஒருவன் தாழ்ந்தவனாகப் பிறந்துவிட்டு (தனக்குத்தகாத உயர்ந்த பொருள் கிடைக்கும்போலத் தோன்றுமாயின்), தன்னால் பெறுதலுக்கு உரிய ஆய - தன்னால் அடைவதற்கு உரிமையுள்ளனவாக, துன்னுவது - நெருங்கிச் சேர்வது, என்று - என்று எண்ணி, உக்கு ஆன்று - மனம் உகந்து மேம்பட்டு, சொல்ல - சொல்லுவதற்கு, துணியுமோ என்றான் - துணிவு கொள்வானோ என்று கூறினான், (பயாபதி மன்னன்) (எ - று.) இறைவனானவன் இத்தன்மையுடையோன் இன்னவாறான இன்பத்தை யடைகவென்று அமைந்திருக்க, அம் முறைவழியாகச் செல்லாமல், மக்களாகிய நாங்கள் எம்முடைய நிலைமைக்கு மேம்பட்ட இன்பம் கிடைக்கும்போல் தோன்றுமாயின், அக்காலை இஃது எமக்கு ஏற்ற இன்பமே; ஆகவேதான் இஃது எம்மைச் சேர்கின்றது என்று எண்ணி மீறிச்சொல்வதற்கு எம் இயற்கை இடங்கொடாது என்று பயாபதி மன்னன் இயம்புகிறான். மருசி கொண்டுவந்த திருமுகத்திற்கு உடனே பதிலுரைக்காமையின் காரணத்தை மன்னன் இதனால் உணர்த்தினான். எய்துக என்று தொகுத்தல் விகாரம். |
(இ - ள்.) மெய்ப்புடை தெரிந்து - உண்மை நிலையை ஆராய்ந்து, மேலை - முற்பிறப்பில், விழுதவம் - சிறந்த தவத்தை, முயன்று நோற்றார்க்கு - முயற்சியுடன் செய்தவர்க்கு, உங்கள் சேரி - நீங்கள் சேர்ந்துள்ள இடமாகிய வித்தியாதர உலகத்தின், உயர்நிலை - உயர்ந்த நிலைமையை யுடைய, செல்வம் எல்லாம் - செல்வங்கள் முற்றும், ஒப்புடைத்து - |