(இ - ள்.) கிளர்ந்து - மிகுதிப்பட்டு, ஒளி துளும்பும் மேனிக் கேசரரோடு - ஒளி விளங்குகின்ற உடலையுடைய வித்தியாதரர்களுடனே, மண்மேல் வளர்ந்து - நிலவுலகத்திலே பிறந்து வளர்ந்து, ஒளிதிவளும் பூணோர் - ஒளி விளங்குகின்ற அணிகலன்களை அணிந்தவர்களான் மனிதர்கள், மணவினை முயங்கல் இல்என்ற - திருமணமாகிய செயலைச் செய்துகொள்ளுதல் இல்லை என்று கருதிய, ஐயம் ஈது - இந்த ஐயத்தை, அளந்து அறிவு அரிய சீரோற்கு - அளந்து அறிய முடியாத சீர்த்தியை யுடைய இந்தப் பயாபதி மன்னனுக்கு, அகற்றுக என்று - போக்கவேண்டும் என்று, ஆங்கு - அப்போது, உளர்ந்தனன் - அதற்குஏற்ற சூழ்ச்சியைத் தேடியவனாகி, உணர்வின் ஊக்கி - தன் அறிவினால் ஆராய்ந்து, உரைக்கிய - அவற்றைச் சொல்லத்துணிந்து, எடுத்துக்கூறும் - எடுத்துச் சொல்லலானான், (எ - று.) வித்தியாதரர்களோடு மணவினை செய்துகொள்ளுதல் மனிதர்க்கு வழக்கமில்லை என்று பயாபதி எண்ணி, மருசி தூதுவந்ததைக் குறித்து ஐயங் கொண்டதைப் போக்குமாறு மருசி பேசத்தொடங்கினான். பேசும் பல செய்திகளும் அடுத்த செய்யுள் முதல் தொடங்கும். கேசரர் - வித்தியாதரர் : விண்ணில் போக்குவரவு செய்தலினால் உண்டாகிய காரணப் பெயர். |