(இ - ள்.) அஞ்சலில் தானை வேந்தே - பகைவர்க்கு அஞ்சாத படையையுடைய அரசனே, மஞ்சு இவர் மணம்கொள் சோலை - முகில்கள் தவழப்பெற்றதும் மணத்தைக் கொண்டதுமான பொழிலையுடைய, மணிவரைச் சென்னி வாழும் - அழகிய மலையின் முடியிலே வாழுகின்ற, விஞ்சையர் - வித்தியாதரர்கள் கலைஞர்கள்), விச்சையாலே விழுமியர் என்பது அல்லால் - பல கலைகளின் உணர்வினாலே சிறந்தவர்கள் என்பதல்லாமல், அவரும் மனிதரே - அந்த வித்தியாதரர்களும் மனிதர்களைப் போன்றவர்களே, வெம்சுடர் விளங்கு வேலோய் - வெவ்விய ஒளியினால் விளங்குகின்ற வேற்படையை உடையவனே! யாதும் வேற்றுமை இன்மை கேண்மோ - யாதும் வேறுபாடு இல்லாமையைக் கேட்பாயாக! (எ - று.) வித்தியாதரர்கள் என்போர், மனிதர்களைக் காட்டிலும் பல கலைகளை நன்கு கற்றுத்தேறியுள்ள தன்மையினால் சிறந்தவர்களே யல்லாமல் வேறுவகையினால் சிறந்தவர்கள் அல்லர் என்றுகூறி மேற்செய்யுள்களில் மருசி அதனை விளக்கத் தொடங்குகிறான். கேண்மோ; மோ : முன்னிலை யசை. |
இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர் (இ - ள்.) மண்நவில் - மார்ச்சனை பொருந்திய, முழவின் - மத்தளம் போல் ஒலிக்கின்ற, மாநீர் - மிகுந்த நீரினாற் சூழப் பெற்ற, பவபுரம் உடைய மன்னன் - பவபுரத்திற்கு உரிய அரசனாகிய, பண்நவில் - இசை பழகுகிற, |