பக்கம் : 385 | | | 1வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க நாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான். | (இ - ள்.) நாந்தகக் கிழவர்கோவே - வாட்படைகொண்டு தொழில் புரியும் மன்னர்கட்கெல்லாம் மன்னனே!, வேய்ந்து அகம் நிழற்றும் கோதை - அணியப்பட்டு அவ்விடத்தில் ஒளி விடுகின்ற மாலைபோன்று, மிளிர்மணி கலாபவட்டம் - விளங்குகின்ற மணிகள் அழுத்திய வட்டமாகிய கலாபத்தையும், போந்து - பொருந்தி, அகம்திகழ்ந்து மின்னு - தன்னிடத்து விளங்கி ஒளி விடுகின்ற, பூந்துகில் பொலிந்த அல்குல் - அழகிய ஆடைக் குள்ளே விளங்குகின்ற அல்குலையுடையவளும், ஆய்ந்து அகம்கமழும் கோதை - நுணுகித் தன்னிடமெல்லாம் நறுமணம் வீசுகின்ற மாலையினை அணிந்தவளுமாகிய, அவள் பெற்ற அரச சிங்கம் - அந்தச் சுதஞ்சனை என்பவள் ஈன்ற சிறந்த அரசன், நலத்தின் மிக்கான் - நல்லியல்பில் மிகுந்தவனாகிய, நமி என்பான் - நமி என்று சொல்லப்பெறுபவன், (எ - று.) கச்சன் என்பவனுக்குச் சுதஞ்சனை என்னும் மனைவியிடம் தோன்றியவன் நமி. கலாபம் - மாதர் இடையணியுள் ஒன்று. அது பதினாறு கோவையுள்ளது. | ( 107 ) | 538. | அங்கவ னரசு வேண்டா 2றக்கடல் படைத்த நாதன் பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி தங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப் பொங்கிய காதல்கூரப் பாடினன் புலமை மிக்கான். | (இ - ள்.) புலமைமிக்கான் - நல்லறிவு மிகுந்தவனாகிய, அவன் - அந்த நமி என்பவன், அரசுவேண்டான் - அரசாட்சி செய்தலை விரும்பா தவனாகி, அறம் கடல்படைத்த நாதன் - அறக்கடலைப் படைத்திட்ட தலைவனும், பங்கயம் கமழும் மேனி - தாமரைமலரின் மணம் வீசப்பெற்ற உடலையும், பவத்திர பரமயோகி - பரிசுத்தமான பரமயோகியும் ஆன அருகக் கடவுள், தங்கிய தியானப்போழ்தில் - தங்கப்பெற்ற தியானத்தை யுடைய காலத்திலே, தாழ்ந்து - வணங்கி, பொங்கிய காதல் கூர - மேன்மேற் கிளந்த அன்பு மிகுதியாக, பாடினன் அந்தக் கடவுளை நோக்கிப் பாடலானான், (எ - று.) நமி அரசு வேண்டாமல் அருகக்கடவுளை உள்ளத்திற்கொண்டு தியானித்தான். அந்தத் தியான மிகுதியால் அருகக்கடவுள் வெளிப்பட்டாற் போல அறிவுக்குப் புலனாயிற்று. அக்கடவுளைப் பணிந்து பேரன்புகொண்டு பாடலானான் என்பதாம். பாடியதை அடுத்த மூன்று பாடல்களிற் காண்க. அங்கு : அசை. | ( 108 ) |
| (பாடம்) 1. வேந்தகம். 2. அலைகடல். | | |
|
|