(இ - ள்.) அறவேந்தே - அறவாழியையுடைய அரசே!, அலகு இலா - எல்லை இலா - எல்லை இல்லாத, ஞானத்து அகத்து - ஞானத்தினுள்ளே, அடங்க நுங்கி - யாவும் அடங்குமாறு விழுங்கி [தன்னடைய எல்லையற்ற பேரறிவுக்கு எல்லாவற்றையும் பொருளாகக்கொண்டு] உலகு எலாம் - எல்லா உலகங்களையும், நின்னுள் ஒளித்தாயும் நீயே - [வெளித்தோன்றாமல்] நினக்குள்ளே மறையச் செய்தவனும் நீயே யாவாய், ஒளித்தாயும் நீயே - உலகங்களையெல்லாம் ஒளித்தவனாக இருந்தும், உயிர்க்கு எலாம் - எல்லா உயிர்கட்கும், கண்ணாய் அளித்தாயும் - கண்போலச் சிறந்தவனாக இருந்து அருள் செய்தாயும், காத்தாயும் - காப்பாற்றினவனும், நீயே - நீயே யாவாய், வாழி, வாழ்க, (எ - று.) இதுமுதல் மூன்று பாடல்கள் அருகக்கடவுள் வணக்கம், மும் மூர்த்திகளும் அருகக் கடவுளே என்பது சைநக் கொள்கையாதலால், அளித்தாயும் ஒளித்தாயும் காத்தாயும் நீயே என்று நமி அருகக்கடவுளைப் போற்றுகிறான். |
(இ - ள்.) திருமாலே!, அழல்நாறும் - வெப்பந்தோன்றும், வெம்கதிரோன் - வெவ்விய ஒளிகளையுடைய கதிரவனும், நாண - வெட்கத்தையடையுமாறு, அலராது - வளர்தலின்றி என்றும் ஒரே தன்மையாய், நிழல்நாறும் மூர்த்தியாய் - ஒளி விளங்குகின்ற திருவடி வத்தையுடையவனாய், நின்றாயும் நீயே - நிற்பவனும் நீயே; நின்றாயும் நீயே - நின்றவனாயிருந்தும் நீயே, நிறைபொருள் எல்லைக்கண் - நிறைந்த பொருள்களின் எல்லையிடத்து, சென்றாயும் - சென்றவனாயும், வென்றாயும் - வினைகளை வென்றவனாயும் இருப்பாய், நீயே - நீயே யாவாய், வாழி - நீ வாழவாயாக! (எ - று.) |