பக்கம் : 392
 

தேவர்களுடைய இன்பவாழ்க்கைச் செல்வம் தனக்கு இந்த நிலவுலகத்தில் வேண்டும் என்று
தெரியப்படுத்திக் கொள்ளுகிறான். பாம்புகள் இசைச் சுவையை நன்கு உணரும்
ஆற்றலமைந்தவைகள்; அதற்கு ஏற்ப ஈண்டு, ‘பண்மிசைப்படர்ந்த சிந்தைப் பணதரன்,
என்றார்.

( 117 )

ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்

548. 1இச்சையங் குரைப்பக் 2கேட்டாங் கிமையவ ரியற்கை யெய்தும்
விச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்
நிச்சமும் நிலாக வென்று நிறுவிப் போய் நிலத்தின் கீழ்த்த
னச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே.
 

     (இ - ள்.) அங்கு - அப்போது, இச்சை உரைப்பக் கேட்டு - நமிமன்னன்
தன்னுடைய விருப்பத்தைக் கூறுதலைக்கேட்டு, ஆங்கு - உடனே, இமையவர் இயற்கை
எய்தும் - தேவர்களின் தன்மையை அடையவல்ல, விச்சையும் - கலையும், துணையும் -
துணையாற்றலையும், வெள்ளி விலங்கலும் கொடுத்து - வெள்ளி மலையையும் ஈந்து,
வேந்தாய் - அரசனாய், நிச்சமும் - நாடோறும், நிலாக என்று - இவைகள் நினக்கு
விளங்குவதாக என்று வரங்கொடுத்து, நிறுவிப்போய் - நிலையாக வாழுமாறு கூறிச்சென்று,
ஆயிரம் பணத்தினால் - ஆயிரம் படங்களையுடைய ஆதிசேடன், நிலத்தின் கீழ் -
நிலவுலகத்தின் கீழேயுள்ள, தன் அச்சம்இல் உலகம் சேர்ந்தான்- தன்னுடைய அச்சமற்ற
உலகத்தை யடைந்தான், (எ - று.)

ஆதிசேடன், நமி மன்னனுக்கு அவன் வேண்டியவாறாதற்குரிய வித்தை முதலியவைகளை
யளித்துத் தன்னுடைய உலகத்தை யடைந்தனன் என்பதாம். நிலாக - நிலாவுக என்னும்
வினைமுற்றின் விகாரம்.

( 118 )

நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று
மரீசி பயாபதிக்குப் பகர்தல்

549. ஆங்கவன் 3குலத்து ளானெம் மதிபதி யவனோ 4டொப்பா
யோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு 5முடைய நீயு
மீங்கிரு குலத்து ளீர்க்குங் 6கருமம்வந் திசைத்த போழ்தி
னீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்ததோர் 7நீர்மைத் தென்றான்.
 

(பாடம்) 1. இச்சை யாங்கு. 2. கேட்டே. 3. குலத்தினான்.
4. டொப்பாவோங். 5. முடையநீயும். 6. கருமமுந்து. 7. நிலைமைத்து.