பக்கம் : 394
 

அங்கதநிமித்திகன் கூறுதல்

551. யாவனாற் படைக்கப்பட்ட 1துலகெலாம் யாவன் 2பாத்த
3தேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து
பூவினாள் பொறியொன் 4றானாள் புண்ணிய வுலகங் காண
ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம்.
 

     (இ - ள்.) உலகுஎலாம் - உலகம் முழுவதும், யாவனால் படைக்கப் பட்டது -
எவனால் உண்டாக்கப்பட்டதோ, யாவன் பாத்தது - எவனால் விரிவுபடுத்தப்பட்டதோ,
எவனால் வணக்கப்பட்டது - எவனால் வணங்குமாறு செய்யப்பட்டதோ, யாவனது அகலம்
சேர்ந்து - எவனுடைய மார்பைச் சேர்ந்து, பூவினாள் பொறி ஒன்று ஆனாள் - பூவில்
வாழ்பவளாகிய திருமகள் ஒன்றுபட்டுள்ளாளோ, யாவன் நம்மை புண்ணிய உலகம்காண
ஏவினான் - எவன் நம்மை நல்லுலகத்தைக் காண ஏவினானோ, உலகம் எல்லாம் யாவனது
- இவ்வுலகம் எல்லாம் எவனுடையதோ? (எ - று.)

‘மற்றவன் அருளின் வந்தான்‘ என்று அடுத்த செய்யுளோடு தொடரும். இப்பாடல்
அருகக்கடவுளின் தன்மையைக் கூறுகிறது. உலகத்தைப் படைத்துப் பாகுபடுத்தியவன்;
தன்னை வணங்குமாறு செய்தவன்; திருமகள் மார்பில் பொருந்தப்பெற்றவன்;
தன்னையடைந்தாரை நல்லுலகத்திற்கு அனுப்புபவன்; உலகத்திற்கு உரிமையுடையவன்;
ஆகிய எல்லாம் அருகக்கடவுளே என்க.

( 121 )

552. மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்
சுற்றிநின் 5றிலங்குஞ் சோதித் தோள்வலி 6யெனும்பே ரானக்
கொற்றவ னுலகங் 7காத்த கோன்முறை வேண்டி யன்றே
கற்றவ ரின்று காறுங் காவனூல் 8கற்ப தெல்லாம்.
 

      (இ - ள்.) மரகத மணிக்குன்று ஒப்ப - மரகதமணியினால் இயன்ற மலையை
ஒத்திருக்க, சுற்றி நின்று இலங்கும் - சுற்று வட்டத்தில் விட்டுவிட்டு விளங்குகிற, சோதி -
ஒளியினையுடைய, தோள்வலி எனும் பேரான் - வாகுவலி என்னும் பெயரையுடையவன்,
அவன் அருளில் வந்தான் - அந்த அருகக் கடவுளுடைய அருளினால் தோன்றினான்,
அக்கொற்றவன் - அந்த


(பாடம்) 1. குலமெலாம். 2. பாதத். 3. தேவரால். 4. றானான். 5. இலங்கு.
6. என்னும் பேரக். 7. காத்து. 8. வேண்டு கொண்டாய்.