பக்கம் : 395
 

வாகுவலி மன்னன், உலகம் காத்த கோன்முறைவேண்டி - அன்றே - உலகத்தைப்
பாதுகாத்த செங்கோல் முறையை விரும்பியல்லவா, கற்றவர் இன்றுகாறும் - அறிஞர்கள்
இற்றை நாள் வரையிலும், காவல்நூல் கற்பது எல்லாம் - உலகத்தைப் பாதுகாப்பதாகிய
முறைமையை மேற்கொள்வது யாவும், (எ - று.)
அருகக்கடவுளின் அருளினால் தோன்றிய வாகுவலி மன்னன் அரசாட்சி முறையைப்
பின்பற்றிநின்றே, பின்வந்த அரசர்கள் பலரும் அரசாட்சி புரியலாயினார். காவல்நூல் -
அரசாட்சி முறைமை. கற்றவர்; வினையாலணையும் பெயர்.

( 122 )

வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்

553. 1கொடிவரைந தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான்
இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து
கடிமண மனுக்குத் தெய்வக் கழலடி யரசர் தங்கள்
முடிபொர முனிவிற் றான்போய் முனிவன 2முன்னி னானால்.
 

     (இ - ள்.) கொடிவரைந்து எழுதப்பட்ட - கொடியைக் கீற்றுவடிவம் பொருந்துமாறு
எழுதப்பட்ட, குங்குமம் குவவு தோளான் - குங்குமக்கலவை பூசப்பெற்ற திரண்ட
தோளையுடைய வாகுவலி என்ற அந்த அரசன், இடிமுரசு அதிரும் தானை - இடிபோல
ஒலிக்கிற பேரிகையை அடிக்கிற படையையுடைய, இறைத்தொழில் - அரசாட்சித் தொழிலை,
மகனுக்கு ஈந்து - தன்னுடைய மகனுக்குக் கொடுத்துவிட்டு, கடிமணம் அனுக்கும் - மிகுந்த
நன்மணத்தைக் கீழ்ப்படுத்துகிற, தெய்வக்கழல் அடி - தெய்வத்தன்மை பொருந்திய வீரக்
கழலை அணிந்த அடிகளில், அரசர் தங்கள் முடிபொர - வணங்குகின்ற அரசர்களுடைய
முடிகள் மோதுதலைச் செய்ய, முனிவின் - வெறுப்பினோடு, தான் முனிவனம்போய்
முன்னினான் - தான் முனிவர்கள் தவஞ்செய்யும் காட்டையடைந்தான், (எ - று.)

வாகுவலி மன்னன் அரசர்கரசனாயிருந்தும் அந்நிலையிலிராமல் தன்கீழ் அரசாளும்
அரசர்கள் தன்னை வணங்கத் தான் தவஞ்செய்தற்கு முனிவர்கள் தவஞ்செய்யும் காட்டை யடைந்தான். திருமுடிமாலையை முடியில் அணிந்த மன்னர்களின் முடி வாகுவலியின்
அடிகளிற்படுதலால் அவ்வடிகள் ‘கடிமணம் அனுக்கும் தெய்வக் கழலடி‘ ஆயின; குங்குமக்
குழம்பைக்கொண்டு கொடிபோலத் தோளில் எழுதி அழகு செய்து கொள்ளுதல்
அக்காலத்திய வழக்கம் என்பர்.

( 123 )


(பாடம்) 1. கொடிவரைத் தெழுதப்பட்ட. 2. முன்னினானே.