பக்கம் : 402
 

பவச்சுதனானவன் முற்கூறியவாறு கூறுதலும், எல்லார்களும் - அங்கிருந்தவர்களனைவரும், அன்னதே என்று - அவ்வாறே செய்யத்தக்கது என்று, ஒட்டினார் - உடன்பட்டார்கள், (எ - று.)

பவச்சுதன் பகர்ந்தவைகளைக் கேட்டு மற்றைய அமைச்சர்கள் உடன்பட்டனர் என்க.

( 93 )

சுதசாகரன் என்பவன் சொல்லுதல்

332.

அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்
வல்லி யாங்கணி சாந்து 1ம் வனைந்துராய்
மல்லி னான்மலி 2மார்பற்கு மற்றிவை
சொல்லி னான்சுத சாகர னென்பவே.
 

    (இ - ள்.) அல்லி நாண்மலர் தாரும் - அகவிதழ்களையுடைய அன்றலர்ந்த
மலர்மாலையும், முத்தாரமும் - முத்து மாலையையும், வல்லி ஆங்கு அணிசாந்தும்
வனைந்து - கொடியாக அங்கு எழுதப்படுகின்ற சந்தனத்தையும் அணிந்து, உராய்
மல்லினால் மலி மார்பற்கு - மோதுகின்ற மற்போரிலே சிறந்து விளங்குகிற மார்பையுடைய
சடியரசனுக்கு, இவை - மேற் கூறப்போகும் மொழிகளை, சுதசாகரன்-சுகசாகரன் என்னும்
பெயரினை யுடைய அமைச்சன், சொல்லினான் - சொல்லத் தொடங்கினான், (எ - று.)

சுதசாகரன் என்னும் அமைச்சன் தன் எண்ணங்களை வெளியிடுகிறான். ஆங்கு -
அசையுமாம். என்ப : அசை.
 

( 94 )

பவச்சுதன் கூறியது உண்மை என்றல்

333. ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்
பாழி யாகின்ற திண்டோட் பவச்சுதன்
சூழி யானையி னாய் 3சொலப் பட்டன
ஊழி யாருரை 4யும்மொத் துளகண்டாய்.
 

     (இ - ள்.) சூழி யானையினாய் - முகபடாத்தை யணிந்த யானையை யுடையவனே! ஆழி ஆள்கின்ற அச்சுவகண்டன் மேல் - ஆணையுருளை யைச் செலுத்துகின்ற அச்சுவகண்டன் மீது, பாழி ஆகின்ற திண்தோள்
 


    (பாடம்) 1. மணிந்துராய். 2. மார்வற்கு. 3. சொல்லப்பட்டன.